செய்திகள்
கிரிக்கெட் விளையாடும் போது பேட் தாக்கியதில் கல்லூரி மாணவன் உயிரிழப்பு
மேற்கு வங்காளம் மாநிலத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் கிரிக்கெட் விளையாடுகையில் ஸ்டெம்புக்கு மிக அருகே பீல்டிங் செய்த போது பேட் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். #Cricket
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலம் நாதியா மாவட்டத்தில் உள்ள கல்யானி என்ற பகுதியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் படித்து வரும் 21 வயது மாணவர் நேற்று கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினார். ஸ்டெம்புக்கு மிக அருகில் அவர் பீல்டிங் நின்றுள்ளார்.
பேட்டிங் செய்த மற்றொரு மாணவர் பந்தை அடிக்க பேட்டை சுழற்றிய போது, பீல்டிங் நின்ற மாணவர் மீது பேட் பயங்கரமாக தாக்கியது. இதில், நிலை குலைந்த அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து, அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். #Cricket #TamilNews
மேற்கு வங்காளம் மாநிலம் நாதியா மாவட்டத்தில் உள்ள கல்யானி என்ற பகுதியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் படித்து வரும் 21 வயது மாணவர் நேற்று கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினார். ஸ்டெம்புக்கு மிக அருகில் அவர் பீல்டிங் நின்றுள்ளார்.
பேட்டிங் செய்த மற்றொரு மாணவர் பந்தை அடிக்க பேட்டை சுழற்றிய போது, பீல்டிங் நின்ற மாணவர் மீது பேட் பயங்கரமாக தாக்கியது. இதில், நிலை குலைந்த அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து, அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். #Cricket #TamilNews