search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர்"

    • சிவகாசி அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோடு லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் மர அரவை மில்லில் வேலை பார்த்து வருகி றார்.

    இவரது மனைவி அச்சகத்தில் வேலை பார்க்கிறார். இவர்களது மகன் ஜெயராஜன் (வயது 19). விருதுநகரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் தனது நண்பர்கள் மோகன்ராஜ், மாரீஸ் கார்த்திக் ஆகியோ ருடன் அழகாபுரியில் உள்ள ஒடையில் குளிக்க சென்றனர். பின்னர் மாலை யில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.

    மோட்டார் சைக்கிளை ஜெயராஜன் ஓட்டி வந்தார். அவரது நண்பர்கள் பின்னால் அமர்ந்திருந்தனர்.

    சுக்கிரவார்பட்டி பேப்பர் மில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் ஜெயராஜன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்தார்.

    மோகன்ராஜ், மாரீஸ் கார்த்திக் லேசான காயங்களுடன் தப்பினர். அங்கிருந்தவர்கள் அவர் களை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ஜெயராஜன் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து ஜெய்சங்கர் திருத்தங்கல் போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 17-ந்தேதி இரணியல் கோர்ட் அருகில் உள்ள பிரபல டாக்டர் ஒருவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.
    • பணத்தை எண்ணியபோது ரூ. 5 ஆயிரத்தை காணவில்லை

    இரணியல் :

    இரணியல் அருகே உள்ள மைலோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 46). பத்திரம் எழுதும் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 17-ந்தேதி இரணியல் கோர்ட் அருகில் உள்ள பிரபல டாக்டர் ஒருவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். பணத்தை பாக்கெட்டில் வைத்த அவர் வேலைக்கு சென்றுவிட்டார். அங்கு வைத்து பணத்தை எண்ணியபோது ரூ. 5 ஆயிரத்தை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் நெய்யூர் முரசன்கோடு பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் விஜின் (20) கல்லூரி தேர்வு எழுதிவிட்டு அரசு பேருந்தில் வந்து இரணியல் கோர்ட் பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அப்போது கீழே ரூ.5 ஆயிரம் கிடப்பதை பார்த்துள்ளார். அதனையடுத்து போலீஸ் நிலையத்தில் பணத்தை கொடுத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு கூறி சென்றுவிட்டார்.

    இதனிடையே நேற்று காலை பணத்தை இழந்த ராஜேஷ்குமார் இரணியல் போலீஸ் நிலையம் வந்தார். உரிய விசாரணைக்குப்பின், அவரிடம் இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் முன்னிலையில் விஜின் ஒப்படைத்தார். கீழே கிடந்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த விஜினுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது

    • மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.
    • சாலையோர மரத்தில் மோதி மாணவர் பலியானார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேலவாசல் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் குமார் (50) விவசாயி.

    இவர் நேற்று தனது உறவினருடைய வயலில் வேலை பார்த்து ள்ளார்.

    பின்னர் அருகில் உள்ள விஜயராஜன் என்பவருக்கு சொந்தமான வயலில் இருந்த பம்புசெட்டில் குளித்து விட்டு அங்கிருந்த கம்பி கொடிக் கம்பத்தில் துண்டை காய வைத்து விட்டு வீடு திரும்பினார்.

    இந்நிலையில் காலையில் குளிக்க அங்கு சென்றுள்ளார்.

    பின்னர் பம்புசெட்டு அருகே உள்ள கொடிகம்பத்தில் கிடந்த துண்டை எடுத்தார். அப்போது திடீரென மின்சாரம் அவரை தாக்கியது.

    இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்நிலையில் வயலுக்கு சென்ற குமார் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாதால் அவரது உறவினர்கள் தேடி வந்தனர்.

    அப்போது தான் அவர் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பது தெரிய வந்தது.

    பின்னர் இது குறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் இன்ஸ் பெக்டர் ராஜேஷ் கன்னா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டைகீழத் தெருகிராமத்தைச் சேர்ந்தவர் பாலு.

    இவரது மகன் ரிஷால் ( வயது 20).

    இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருவது வழக்கம்.

    அதே போல் இன்றும் கல்லூரிக்கு ரிஷால் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது மன்னார்குடி குருவை மொழி கிராமத்தின் அருகே சென்ற போது எதிர்பாரத விதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த ரிஷால் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரிஷால் உடலை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்காக அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நாகர்கோவிலில் வருகிற 31-ந்தேதி நடக்கிறது
    • மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி நடக்கிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி அக்டோபர் 31-ந்தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் தனித்தனியே பேச்சு போட்டிகள் நடத்தப்பெற உள்ளன.

    பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை நெல்லை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் தெரிவு செய்து அனுப்புவர். போட்டிக்கான தலைப்புகள் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும், பள்ளி மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.

    காந்தியடிகள் பிறந்த நாள் பேச்சு போட்டிக்கான தலைப்புகளாக பள்ளிகளுக்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள், வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் ஆகியவையும், கல்லூரிகளுக்கு காந்தியடிகள் நடத்திய தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், சத்திய சோதனை, மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

    கல்லூரி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. பள்ளி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு 3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

    மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தகவல் கிடைத்ததும் செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    • 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைகுளத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 22). இவர் சூலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-வது ஆண்டு படித்து வருகிறார். மேலும் அவர் பகுதி நேரமாக அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தும் வருகிறார். பாரதிபுரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து அறை எடுத்து தங்கி இருந்து வருகிறார்.

    நேற்று மாலை மகேந்திரன் மற்றும் அவரது நண்பர் கிஷோர் ஆகியோர் வெளியே சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் அறைக்கு சென்று கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளில் ஒக்கிலிபாளையம் அருகே சென்ற போது 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் மகேந்திரன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல சென்றனர். இதனை 2 பேரும் தட்டிக் கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 3 பேரும் சேர்ந்து மகேந்திரன் மற்றும் கிஷோரை மிரட்டி விட்டு அங்கு இருந்து சென்றனர்.

    பின்னர் 2 பேரும் பாம்பம்பட்டியில் உள்ள அறைக்கு சென்று கொண்டு இருந்தனர். ஒத்தகால்மண்டபம் பாலம் அருகே சென்ற போது மழை வந்தது. இதனையடுத்து 2 பேரும் பாலத்துக்கு அடியில் மழைக்காக ஒதுங்கி இருந்தனர். அப்போது 10 மோட்டார் சைக்கிள்களில் பட்டா கத்தி மற்றும் பீர் பாட்டிலுடன் 15 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அவர்கள் மகேந்திரனை பார்த்ததும் இவன் தான் மாலையில் நம்மிடம் தகராறு செய்தவன் என்று கூறி அருகே சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 15 பேரும் சேர்ந்து மகேந்திரனை பீர் பாட்டிலால் தலையில் தாக்கி பட்டா கத்தியால் வெட்டினர். அதில் மகேந்திரனின் வலது கையில் 2 விரல்களும், இடது கையில் ஒரு விரலும் துண்டானது. பின்னர் கும்பல் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மகேந்திரனை அந்த வழியாக சென்றவர்கள் மீது அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டது மலுமச்சம்பட்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என்பது தெரிய வந்தது.

    போலீசார் தூத்துக்குடியை சேர்ந்த பி.டெக், ஐ.டி. 3-வது ஆண்டு படிக்கும் மாணவர் தினேஷ் உள்பட 15 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கல்லூரி மாணவருக்கு கால் மற்றும் இடுப்பு ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • கல்லூரி மாணவர் மீது சரக்கு வேன் மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பல்லடம்:

    திருப்பூர் எம்.ஜி.புதூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மகன் யுவன்ஸ்ரீ (வயது 20), இவர் கோவை தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கல்லூரி முடிந்து நண்பருடன் பல்லடம் வந்த அவர் பஸ் நிலையம் அருகே சாலையை கடக்க முயன்ற போது, கோவையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற சரக்கு வேன் அதிவேகமாக வந்து யுவன் ஸ்ரீ மீது மோதியது. அதன்பின்னரும் நிற்காமல் ரோட்டோரமாக நின்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இதில் கல்லூரி மாணவருக்கு கால் மற்றும் இடுப்பு ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்- பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சரக்கு வேன் ஓட்டுநர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கல்லூரி மாணவர் மீது சரக்கு வேன் மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • காரின் அடியில் இருந்து தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
    • உடனடியாக கவின் காரை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டார்.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் மணிமலை, காளிக்கோ ப்டெக்ஸ் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கவின் (23). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் தனது நண்பரின் காருக்கு கியாஸ் பிடிப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னி மலையில் உள்ள கியாஸ் பங்குக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அரச்சலூர் ரோடு அம்மாபாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகில் சென்று கொண்டிருந்த போது காரின் அடியில் இருந்து தீ பிடித்து எரிந்து கொண்டி ருந்தது.

    இதனை அந்த வழியே ரோட்டில் சென்று கொண்டி ருந்தவர்கள் பார்த்து காரில் தீ எரிவதை கவினிடம் சத்தம் போட்டு தெரிவித்தனர்.

    பின்னர் உடனடியாக கவின் காரை ரோட்டோ ரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டார்.

    அப்போது தீ மள, மள பரவியது. இதனால் உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது.

    காரில் தீ எரிவதை ரோட்டில் சென்றவர்கள் பார்த்து சொன்னதால் கல்லூரி மாணவர் கவின் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக அந்த கார் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
    • நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் அச்சன்குளம் பகுதியை சேர்ந்தவர் ஐசக். இவரு டைய மகன் ஜோனிஸ் (வயது 19). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் விடுமுறைக்காக ஜோனிஸ், சொந்த ஊரான அச்சன் குளத்துக்கு வந்திருந்தார். இவரது நண்பர்கள் செல்வன்புதூரை சேர்ந்த சுபாஷ் (23) மற்றும் அச்சன்குளத்தை சேர்ந்த சுபின் (19). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச்சென்றனர். மோட்டார் சைக்கிளை ஜோனிஸ் ஓட்டிச் சென்றார்.

    கன்னியாகுமரி அருகே உள்ள நரிக்குளம் மகாதான புரம் 4 வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு அருகே சென்ற போது எதிரே கன்னியா குமரியில் இருந்து அஞ்சுகிராமம் நோக்கி கார் வந்தது. எதிர்பாராத விதமாக அந்த கார் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஜொனிஸ், சுபின் மற்றும் சுபாஷ் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை ஜொனிஸ் பரிதாபமாக இறந்தார். சுபின் மற்றும் சுபாஷ் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கன்னியாகுமரி போலீ சார், ஜெனிசின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட் டது.

    விபத்து குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் மாநகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 100-க்கும் மேற்பட்டோர் போலீசாரிடம் சிக்கினர்.
    • மாணவர் அவர்களிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை வேகமாக இயக்கியதால் தவறி கீழே விழுந்தார்.

    சேலம்:

    சேலம் மாநகரில் சமீப காலமாக போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதன் தொடர்ச்சியாக தலைகவசம் அணியாதவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்வது, சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது என பல்வேறு போக்குவரத்து விதி மீறுபவர்களையும் பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள்.

    குறிப்பாக சேலத்தில் முள்ளுவாடி கேட், கலெக்டர் அலுவலகம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, அணைமேடு பாலம், உடையாப்பட்டி பைபாஸ் என அனைத்து பகுதிகளிலும் மறைவான இடத்தில் நின்று கொண்டு தலைகவசம் அணியாதவர்களை விரட்டி விரட்டி பிடித்து வருகிறார்கள்.

    மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் போலீசாரிடம் சிக்கினால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு சேலம் மாநகரில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதி களிலும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் தலா 10 பேரை பிடித்து அபராதம் விதிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதையடுத்து சேலம் மாநகரில் ஒவ்வொரு போலீஸ் நிலைய பகுதிகளிலும் போலீசார் நேற்றிரவு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த வர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

    அதன்படி சேலம் மாநகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 100-க்கும் மேற்பட்டோர் போலீசாரிடம் சிக்கினர். அதில் சிலருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பணம் கையில் இருந்தவர்கள் பணத்தை கட்டிவிட்டு சென்றனர். ஆனால் கையில் பணம் இல்லாதவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தி விட்டு பணத்தை எடுத்து வந்து அபராதத்தை செலுத்தி விட்டு வாகனத்தை எடுத்து செல்லுமாறு அனுப்பி வைத்தனர். இதில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்கள் ஆவர்.

    சேலம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அப்சரா இறக்கம் பகுதியில் டவுன் போலீசார் தீவிர வகான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கல்லூரி மாணவர் ஒருவரை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த மாணவர் அவர்களிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை வேகமாக இயக்கியதால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் முறிந்தது. தற்போது அவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதே போல சூரமங்கலம் புதுரோடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி. நேற்றிரவு அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் பரிசோதனை செய்த போது அவர் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அபராதத்தை கட்டி விட்டு போலீஸ் நிலையத்தில் வந்து வாகனத்தை எடுத்து செல்லுமாறு கூறினர்.

    இதை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற அவர் சாணி பவுடரை குடித்து மயங்கி விழுந்தார் . தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் போலீசார் அவரை மீட்டு சேலம் அர சு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மனைவி அவரை பிரிந்து சென்றதும், நேற்று மனைவியை சந்தித்து விட்டு வீட்டிற்கு திரும்பியபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் மாநகரில் நேற்றிரவு நடந்த இந்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • செல்போனில் எப்போதும் மூழ்கி இருந்து வந்தார்
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுஜின் தூக்குபோட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே கல்லாம்பொற்றைவிளை, செறுகோல் பகுதியை சேர்ந்தவர் கணேசன், தொழிலாளி. இவரது மனைவி அதே பகுதியில் முந்திரி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சுஜின் (வயது 20) தனியார் கல்லூரியில் டி.பார்ம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு தினமும் காலையில் பஸ்சில் சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

    கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்ததும் தனது செல்போனில் எப்போதும் மூழ்கி இருந்து வந்தார். படிப்பில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. இதனால் கணேசன் கண்டித்துள்ளார். மறுநாள் காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுஜின் தூக்குபோட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது ஏற்கனவே சுஜின் இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்தார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கல்லூரி மாணவர், பெண்ணிடம் வழிப்பறி செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    கன்னியாகுமரி மாவட்டம் பளப்பள்ளம் ஏ.அரசுவிளையை சேர்ந்தவர் சுந்தரேஷ். இவரது மகன் அஸ்வின் (19). இவர் மதுரையில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கே.கே.நகர் வாக்கர்ஸ் கிளப் பகுதியில் இவர் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் அஸ்வினை வழிமறித்து அவசரமாக போனில் பேச வேண்டும் என கூறி அஸ்வினிடம் செல்போனை வாங்கினர். பின்னர் செல்போன் பேசுவது போல நடித்த அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசில் அஸ்வின் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கே.புதூர் சம்பக்குளம் ஸ்ரீராம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ். இவரது மனைவி அம்ரிதா (30). இவர் தனது ஸ்கூட்டரில் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச்சென்றார். அங்கு குழந்தையை இறக்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென அம்ரிதா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கே.புதூர் போலீஸ் நிலையத்தில் அம்ரிதா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 9 பேர் சேர்ந்து இரு சக்கர வாகனங்களில் பேச்சிப்பாறை அணையை பார்ப்பதற்காக சுற்றுலா வந்தனர்.
    • ரோஜன்ராஜூ மட்டும் நீச்சல் அடிக்க முடியாமல் தடுமாறினார். அவர் நீரில் மூழ்கி தத்தளித்தார்

    கன்னியாகுமரி :

    கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் தும்பமண் பேரா ணிக்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி ஷாலியா, மகன் ரோஜன்ராஜூ (வயது 19). களியாக்காவிளை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ரோஜன்ராஜூ முதலாம் ஆண்டு பிசியோ தெரபி படித்து வருகிறார். ராஜூ இறந்து விட்ட நிலையில் ஷாலியா கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்து வந்தார்.

    ரோஜன்ராஜூ, புலியூர்சா லையை சேர்ந்த தனது நண்பர் ஆன்றோ என்பவரின் வீட்டில் தங்கியிருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார். நேற்று விடுமுறை என்பதால் நண்பர்கள் 9 பேர் சேர்ந்து இரு சக்கர வாகனங்களில் பேச்சிப்பாறை அணையை பார்ப்பதற்காக சுற்றுலா வந்தனர். அணையை பார்த்து விட்டு அணையின் மேல் பகுதியான தேக்காடு நீர்பிடிப்பு பகுதிக்கு வந்தனர். அங்கு நண்பர்கள் அனை வரும் சேர்ந்து பிரியாணி சமைத்து சாப்பிட்டு சந்தோஷ மாக இருந்தனர்.

    பின்னர் ரோஜன்ராஜூ உட்பட 4 மாணவர்கள் காய லில் இறங்கி குளித்து நீச்சல டித்து கொண்டு இருந்தனர். அவர்கள் காயலின் ஒரு பகுதி வரை சென்று திரும்பி கரைக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது ரோஜன்ராஜூ மட்டும் நீச்சல் அடிக்க முடியாமல் தடுமாறினார். அவர் நீரில் மூழ்கி தத்தளித்தார். உடனே அதிர்ச்சி அடைந்த மற்ற 3 மாணவர்களும் சேர்ந்து ரோஜன்ராஜூவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர் தண்ணீர் அதிகம் குடித்ததால் மயங்கிய நிலையில் இருந்தார்.

    உடனே நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து பேச்சிப்பாறை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து முதலுதவி சிகிட்சை அளித்தனர். இந்த தகவல் அறிந்து திருவட்டார் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பீனாகுமாரி சம்பவ இடத்தை பார்வையிட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தார். பின்னர் ஆம்பு லன்ஸ் மூலம் ரோஜன்ராஜூ குலசேகரம் அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ரோஜன்ராஜூ இறந்து விட்டதாக தெரி வித்தனர். இதனை கேட்டு அவரது நண்பர்கள் கதறி அழுது துடித்தனர்.

    தகவல் அறிந்ததும் பேச்சிப்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். மகன் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் குறித்து தாய் ஷாலியாவுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர்.

    இன்று மாணவனின் உடல் பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. மாணவன் இறந்த அந்த பகுதியில் அபாய பகுதி யாரும் குளிக்க வேண்டாம் என்று ஊராட்சி மூலம் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×