செய்திகள்
தெலுங்கானா: போலீசார் நடத்திய என்கவுண்டரில் 8 நக்சல்கள் சுட்டுக் கொலை
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த போலீசார் நடத்திய என்கவுன்டரில் 8 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த போலீசார் நடத்திய என்கவுன்டரில் 8 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடந்து வருகிறது.
அங்குள்ள பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்ட வனப்பகுதியில் நக்சல்கள் சிலர் பதுங்கி உள்ளதாக அதிரடிப் படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, நேற்று அதிகாலை வனப்பகுதியை அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள் அதிரடிப் படை போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர்களின் தாக்குதலுக்கு அதிரடிப் படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் எட்டு நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நக்சல்கள் பதுங்கியுள்ள பகுதியில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், இந்த என்கவுண்டரில் 8 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த இவர்கள், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தல், ஆள் கடத்தல், கட்ட பஞ்சாயத்து ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தனர் என தெரிவித்தனர்.
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த போலீசார் நடத்திய என்கவுன்டரில் 8 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடந்து வருகிறது.
அங்குள்ள பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்ட வனப்பகுதியில் நக்சல்கள் சிலர் பதுங்கி உள்ளதாக அதிரடிப் படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, நேற்று அதிகாலை வனப்பகுதியை அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள் அதிரடிப் படை போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர்களின் தாக்குதலுக்கு அதிரடிப் படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் எட்டு நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நக்சல்கள் பதுங்கியுள்ள பகுதியில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், இந்த என்கவுண்டரில் 8 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த இவர்கள், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தல், ஆள் கடத்தல், கட்ட பஞ்சாயத்து ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தனர் என தெரிவித்தனர்.