இந்தியா

ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவின் பதவி காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

Published On 2024-05-26 14:38 GMT   |   Update On 2024-05-26 16:24 GMT
  • பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • ஏப்ரல் 2022-ல் ராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவர் பதவியை வகித்தார்.

ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக்காலத்தை ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெனரல் பாண்டே 25 மாத பதவிக்காலத்திற்குப் பிறகு மே 31 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார்.

இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மே 26ம் தேதி அன்று அமைச்சரவையின் நியமனக் குழு, ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் சி பாண்டேவின் பணியை ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

அவரது ஓய்வு வயதைத் தாண்டி (மே 31), அதாவது ஜூன் 30 வரை, இராணுவ விதிகள் 1954 இன் 16 ஏ (4) விதியின் கீழ் நீட்டிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெனரல் பாண்டேவுக்குப் பிறகு இரண்டு உயர் அதிகாரிகளும் பதவி உயர்வு பெற வேண்டிய நிலையில், ராணுவத் தலைவர் ஜெனரல் மனோஜ் பாண்டேவுக்கு ஒரு மாதம் நீட்டிப்பு கிடைத்துள்ளது.

ஜெனரல் பாண்டே கடந்த டிசம்பர் 1982- ல் கார்ப்ஸ் ஆஃப் இன்ஜினியர்ஸில் (தி பாம்பே சப்பர்ஸ்) நியமிக்கப்பட்டார். 40 ஆண்டுகளுக்கும் மேலான அவரது ராணுவ பணியில், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களில் சீனாவுக்கு எதிராகப் பாதுகாப்புப் பொறுப்பு வகிக்கும் கிழக்கு ராணுவக் கட்டளைத் தளபதியாக அவர் பணியாற்றினார்.

அவர் ஏப்ரல் 2022-ல் ராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவர் பதவியை வகித்தார்.

Tags:    

Similar News