உலகம்

நெருங்கும் ரீமால் புயல்- வங்க தேசத்தில் லட்சக்கணக்கானோர் வெளியேற்றம்

Published On 2024-05-26 12:44 GMT   |   Update On 2024-05-26 12:44 GMT
  • மேற்குவங்கம் சாகர் தீவுகளுக்கும், வங்கதேசத்தின் கெபுபாராவுக்கு இடையே கரையை கடக்க உள்ளது.
  • புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 130 கிமீ வேகத்தில் காற்று வீசும்.

வங்கக்கடலில் உருவான ரீமால் புயல், அதி தீவிர புயலாக வலுவடைந்த நிலையில் இன்று இரவு மேற்குவங்கம் சாகர் தீவுகளுக்கும், வங்கதேசத்தின் கெபுபாராவுக்கு இடையே கரையை கடக்க உள்ளது.

இந்நிலையில், ரீமால் புயல் நெருங்கி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்க தேசத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 130 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேச கடலோர மாவட்டங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு பெரும் அபாய சமிக்ஞை எண். 10 ஒலிக்கப்பட்டுள்ளது. அங்கு மீன்பிடி படகுகள், இழுவை படகுகள் மற்றும் கப்பல்கள் மறு அறிவிப்பு வரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கதேச மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண அமைச்சர் எம்.டி. மொஹிபுர் ரஹ்மான் சின்ஹுவாவிடம் கூறுகையில், "பத்து மிகவும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் இருந்து குறைந்தது 8,00,000 பேர் ஏற்கனவே தங்குமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்" என்றார்.

மேலும், அங்கு கனமழை எதிரொலியால் கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Tags:    

Similar News