செய்திகள்
இந்திரா காந்தியின் 100-வது பிறந்த நாள்: ட்விட்டரில் பிரதமர் மோடி மரியாதை
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
புதுடெல்லி:
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மற்றும் விடுதலைக்காக போராடிய ஜவஹர்லால் நேருவின் மகளான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூறாவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று டுவிட்டர் வழியே அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மற்றும் விடுதலைக்காக போராடிய ஜவஹர்லால் நேருவின் மகளான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூறாவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று டுவிட்டர் வழியே அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.