செய்திகள்
பெங்களூருவில் 35 பவுன் நகை திருடிய மலையாள டி.வி. நடிகை கைது
பெங்களூருவில் 35 பவுன் நகை திருடிய மலையாள டி.வி. நடிகையை கேரள போலீசார் துணையுடன் கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் தலசேரி பகுதியைச் சேர்ந்தவர் தனுஜா (வயது 24). இவர், சில மலையாள டெலிவிஷன் தொடர்களில் நடித்துள்ளார். வாய்ப்புகள் குறைந்தபோது கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வேலைக்கு சென்றார்.
அங்கு கேரளாவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் பணி புரிந்தார். அப்போது வீட்டில் இருந்த 35 பவுன் நகைகள் மாயமானது.
இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் பெங்களூரு போலீசில் புகார் செய்தார்.
அதில், நடிகை தனுஜா மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர்தான் நகைகளை திருடி இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். அதன் பேரில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுஜாவை தேடினர்.
அப்போது அவர், கேரளாவுக்கு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கர்நாடகா போலீசார் கேரள போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் மூலம் தலசேரி பகுதியில் பதுங்கி இருந்த தனுஜாவை கண்டுபிடித்து கைது செய்தனர். திருடிய நகையை அங்குள்ள வங்கியில் அடகு வைத்திருந்தார். அதனையும் போலீசார் மீட்டனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக கர்நாடகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கேரள மாநிலம் தலசேரி பகுதியைச் சேர்ந்தவர் தனுஜா (வயது 24). இவர், சில மலையாள டெலிவிஷன் தொடர்களில் நடித்துள்ளார். வாய்ப்புகள் குறைந்தபோது கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வேலைக்கு சென்றார்.
அங்கு கேரளாவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் பணி புரிந்தார். அப்போது வீட்டில் இருந்த 35 பவுன் நகைகள் மாயமானது.
இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் பெங்களூரு போலீசில் புகார் செய்தார்.
அதில், நடிகை தனுஜா மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர்தான் நகைகளை திருடி இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். அதன் பேரில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுஜாவை தேடினர்.
அப்போது அவர், கேரளாவுக்கு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கர்நாடகா போலீசார் கேரள போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் மூலம் தலசேரி பகுதியில் பதுங்கி இருந்த தனுஜாவை கண்டுபிடித்து கைது செய்தனர். திருடிய நகையை அங்குள்ள வங்கியில் அடகு வைத்திருந்தார். அதனையும் போலீசார் மீட்டனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக கர்நாடகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.