search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை திருட்டு"

    • பஸ் நிலையம் வந்த பொது அந்த 2 பெண்களும் அவசர அவசரமாக பஸ்சில் இருந்து இறங்கி சென்றுள்ளனர்.
    • போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    மத்தூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூர் மாவட்டம் டூப்பனஅள்ளி இந்திரா நகரையை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், இவரது மனைவி சத்யா மற்றும் குழந்தைகளுக்கு பள்ளியின் கோடை விடுமுறையொட்டி சத்யாவின் அம்மா வீடான திருவண்ணாமலையில் குழந்தைகளுக்களை விட்டுவிட்டு மீண்டும் சத்யா, அவரது தங்கை லட்சுமி, கணவர் ஸ்ரீகாந்த் ஆகிய 3 பேரும் நேற்று இரவு திருவண்ணாமலையிலிருந்து பெங்களூர் நோக்கி அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்பொழுது மத்தூர் அருகே பஸ் வந்தபோது 2 பெண்கள் சத்யாவின் இருக்கைக்கு பின் உரசியவாறு நின்று கொண்டு கையில் இருந்த காசை 2, 3 முறை கீழே போட்டு எடுப்பது போல் நடித்து வந்தனர்.

    இந்நிலையில் மத்தூர் பஸ் நிலையம் வந்த பொது அந்த 2 பெண்களும் அவசர அவசரமாக பஸ்சில் இருந்து இறங்கி சென்றுள்ளனர். இதை சந்தேகித்த சத்யா அவரது பையை பார்த்துள்ளார். அப்பொழுது பையில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 6 பவுன் தங்க நகை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சத்திய கூச்சலிட்டு அழுதுள்ளார்.

    பின்னர் டிரைவர் அந்த பஸ்சை மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு ஓட்டி சென்றார். இதையடுத்து மத்தூர் போலீசார் சத்திய கூறிய அடையாளத்தின் பெயரில் மத்தூர் பஸ் நிலையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர்.

    அதில் 2 பெண்கள் ஊத்தங்கரை செல்லும் பஸ்சில் ஏறி சென்றது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அந்த பஸ் ஊத்தங்கரை செல்வதற்கு முன்னே சாமல்பட்டி அருகே பஸ்சை நிறுத்தி அதில் பயணித்த 2 பெண்களையும் பிடித்து பரிசோதனை செய்தனர். அப்பொழுது அதில் ஒரு பெண்னின் உள்ளாடையில் தங்க நகை இருந்தது தெரிய வந்தது. பின்னர் நகையை மீட்டு அந்த 2 பெண்களையும் கைது செய்து மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் லட்சுமி புரத்தைச் சேர்ந்த பிரியா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கருத்தம்மா என்கிற கார்த்திகா என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மத்தூர் போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    • தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று சித்தூர் மாவட்டம் புத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த கொள்ளையனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    • ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று பூட்டிகிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடிச் சென்று உள்ளான்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் நகைக்கடை நடத்தி வருபவர் மகாவீர் சந்த். கடந்த சில நாட்களுக்கு முன்பு பூட்டி இருந்த இவரது வீட்டின் பூட்டை உடைத்து 182 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளைபோனது. இதே போல் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் வீட்டில் 15 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தபோது இந்த 2 கொள்ளையிலும் ஈடுபட்டது ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையன் சதீஷ் ரெட்டி என்பது தெரிந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று சித்தூர் மாவட்டம் புத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவன் மீது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே 80 வழக்குகள் இருப்பது தெரிந்தது. இப்போது 81-வது முறையாக கொள்ளை வழக்கில் சதீஷ் ரெட்டி பிடிபட்டு உள்ளார். பல கொள்ளை வழக்குகளில் அவர் பிடிபடாமல் சுற்றி வந்த நிலையில் காஞ்சிபுரம் கொள்ளை வழக்கில் பிடிபட்டு இருக்கிறான்.

    அவனிடம் இருந்து 88 பவுன் நகை, ரூ.36 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று பூட்டிகிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடிச் சென்று உள்ளான். ஒரே இடத்தில் கைவரிசை காட்டினால் சிக்கிக்கொள்வோம் என்பதால் இடத்தை அடிக்கடி மாற்றியதாகவும் கூறி உள்ளான்.

    கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    • நகை, ரூ.2,500 மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புதுத் தெருவை சேர்ந்தவர் காஜா மைதீன்.

    கடந்த வாரம் 13-ந்தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே மின்மீட்டர் பெட்டிக்குள் சாவியை வைத்துவிட்டு கணவன்-மனைவி 2 பேரும் பள்ளிவாசலுக்கு இரவு தொழுகைக்கு சென்றார்.

    தொழுகை முடிந்த பிறகு இரவு வீட்டுக்கு வந்த போது, 10 பவுன் நகை, ரூ.2,500 மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான செல்போன் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, சுதாகர் உள்ளிட்ட தனிப்படை போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் திருட்டில் ஈடுபட்டது கடையநல்லூர் அருகே திரிகூடபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தீன் முகமது பாதுஷா (வயது 20) என்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அந்த வாலிபரிடம் இருந்த அனை த்து பொருள்களையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    • நாகர்கோவில், நெல்லை ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • அன்பழகன் நகைகளை அடகு வைத்திருப்பதாக கூறினார்.

    நாகர்கோவில்:

    சென்னையை சேர்ந்தவர் சாந்தி. இவர் குடும்பத்தோடு நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக நாகர்கோவிலுக்கு வந்தார்.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் வந்தபோது சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் ரெயிலை விட்டு இறங்கினார்கள். அப்போது அவர்களது கைப்பை மாயமாகி இருந்தது. அதில் 30 பவுன் நகைகள் இருந்தது.

    இதையடுத்து அவர்கள் கைப்பையை அந்த ரெயில் பெட்டி முழுவதும் தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை. இதை யாரோ மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர். இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நாகர்கோவில், நெல்லை ரெயில் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    ஆனால் எந்த ஒரு துப்பும் துலங்கவில்லை. இந்த வழக்கை விசாரிக்க ரெயில்வே டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில், நெல்லை ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது சாந்தி பயணம் செய்த பெட்டியில் இருந்து இறங்கி செல்கிறார்களா என்பது குறித்த விவரங்களை சேகரித்தனர். அப்போது நெல்லை ரெயில் நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறங்கி செல்வது போன்ற வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது.

    அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் நெல்லை பாளையாங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அன்பழகன் (வயது 50) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் சாந்தியின் கைப்பையை எடுத்துச் சென்றதை ஒப்புக்கொண்டார். அன்பழகனை கைது செய்த போலீசார் அந்த நகைகளை மீட்க நடவடிக்கை எடுத்தனர். அன்பழகன் நகைகளை அடகு வைத்திருப்பதாக கூறினார். அந்த நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் பாதியளவு நகைகள் மீட்கப்பட்டுள்ளது. மீதி நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
    • வீரப்பூர் என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இடைய பொட்டல் தெருவை சேர்ந்த ராமர் என்பவரது மனைவி சுமதி (வயது56). இவர் கடந்த ஜூலை 1-ந் தேதி சனி பிரதோஷத்தை முன்னிட்டு மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    அப்போது கூட்டத்தில் சுமதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயின் திருடு போனது. இதுகுறித்த புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்த செயின் பறிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரப்பூர் என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான தனிப்படையினர் திருட்டு வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியை சேர்ந்த முருகன் (55), அவரது மனைவி அலமேலு (45) ஆகியோரை கைது செய்தனர்.


    மேலும் அவர்களுடன் இருந்த கோவில்பட்டியைச் சேர்ந்த பொன்மணி (32), மாரிமுத்து (26), செல்வி (34), நாகம்மாள் (57) ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி மடவார் வளாகம் கோவிலுக்குச் சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறித்தது, கடந்த ஜூன் மாதம் வ.புதுப்பட்டி ரேணுகா தேவி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் மகாலட்சுமி என்பவரிடம் 6 பவுன் செயின் பறித்தது தெரியவந்தது. கைது செய்த 6 பேரிடமிருந்து 9 பவுன் நகை மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இவர்கள் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் ஊர்களுக்கு குழுவாக சென்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருட்டில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார் தங்களது விசாரணை குறித்து ஊர் பெரியவர்களிடம் தெரிவித்தனர்.
    • கிராமத்தில் உள்ள மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு மின் விளக்குகள் மீண்டும் எரிய விடப்பட்டது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய பொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராகவன் (வயது50), பம்ப் ஆபரேட்டர். இவரது மனைவி பாண்டியம்மாள். 100 நாள் திட்டத்தில் வேலை பார்க்கிறார்.

    சம்பவத்தன்று பாண்டியம்மாள் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 26 பவுன் நகைகள், ரூ.21,500 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து சிந்துபட்டி போலீஸ் நிலையத்தில் ராகவன் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா? என சோதனை நடத்தினர்.

    பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் குறிப்பிடும்படியாக தடயங்கள் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. கிராமத்திற்குள் பட்டப்பகலில் திருட்டு நடந்துள்ளதால் வெளியூரை சேர்ந்த நபர்கள் திருட்டில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை எனவும், இது உள்ளூரில் இருப்பவர்களில் ஒருவரின் கைவரிசையாகத்தான் இருக்கும் என போலீசார் சந்தேகித்தனர்.

    அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார் தங்களது விசாரணை குறித்து ஊர் பெரியவர்களிடம் தெரிவித்தனர். அப்போது கூடிப்பேசிய ஊர் பெரியவர்கள் நகை-பணத்தை திருடியவரை உள்ளூரில் வைத்து கைது செய்தால் கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்படும் என நினைத்தனர். இதையடுத்து நகை-பணத்தை மீட்டுத்தர வேறு வழிமுறையை கையாள முடிவு செய்தனர். இதுகுறித்து கிராமத்தினரிடமும் பேசினர்.

    அதன்படி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஒரு பேப்பர் கவரை கொடுத்தனர். இரவில் பள்ளிக்கூடத்தில் ஒரு பெரிய அண்டாவை வைத்து அனைத்து மின்விளக்குகளையும் அணைத்து விட்டு யாராவது திருடி இருந்தால் கவருக்குள் பொருளை வைத்து அண்டாவிற்குள் போட்டுவிட வேண்டும் என முடிவு செய்தனர்.

    இது தொடர்பான விவரங்களை தண்டோரா மூலம் கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் அறிவித்தனர். இரவு 8 மணிக்கு பள்ளிக்கூட அறையில் 2 அண்டாக்கள் வைக்கப்பட்டது. பின்னர் கிராமத்தில் உள்ள மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு மின் விளக்குகள் மீண்டும் எரிய விடப்பட்டது. 

    ராகவன்-பாண்டியம்மாள்.

    ராகவன்-பாண்டியம்மாள்.

    பின்னர் அண்டாவில் இருந்த கவர்களை பிரித்துப் பார்த்தபோது ஒரு கவரில் நகைகள் இருந்தன. ஆனால் திருடப்பட்ட 26 பவுன் நகைகளில் 23 பவுன் நகை மட்டுமே இருந்தது. மேலும் பணத்தை வைக்கவில்லை. கவரில் இருந்தது திருடப்பட்ட ராகவனின் நகைகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து நகைகளை கிராம பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நகைகளை ராகவனிடம் ஒப்படைத்தனர்.

    தங்களது கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் காணாமல் போன நகைகளை மீட்க பழங்காலத்து நடைமுறைகளை கையாண்ட சுவாரசியமான இந்த சம்பவத்தை பார்த்த போலீசார் கிராம மக்களை பாராட்டினர்.

    இதுதொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது:-

    பொதுவாக அந்த காலத்தில் இருந்தே இதுபோன்ற நடைமுறையை கையாண்டு வருவதாகவும், பழங்காலத்தில் பெரிய பொருட்கள் என்றால் வீடு வீடாக பைகளை கொடுத்தும், மோதிரம் போன்ற பொருட்கள் என்றால் சாணி உருண்டையைக் கொடுத்தும் ஒவ்வொரு வீடாக கொடுப்பது வழக்கம். திருடியவர்கள் அதை கொண்டு வந்து அண்டாவில் போட்டு விடுவார்கள். இப்போது அதே நடைமுறையை கையாண்டதில் நகைகள் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பாக்கி உள்ள நகை-பணத்தை மீட்க மீண்டும் இதே வழிமுறையை கையாளப்போகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    தமிழ் சினிமாக்களில் நகைச்சுவை காட்சிகளில் இதுபோன்ற வழிமுறைகளை பார்த்திருக்கிறோம். ஆனால் நேரடியாக ஒரு கிராமத்தில் இதுபோன்ற காட்சிகளில் நகை மீட்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    • சுப்பிரமணி (55). விவசாயி. இவரது மனைவி செல்வி (50). செல்வி அவரது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
    • 2 மணி நேரம் கழித்து மீண்டும் அவர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்களபுரம் உரம்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (55). விவசாயி. இவரது மனைவி செல்வி (50). செல்வி அவரது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

    பூட்டு உடைப்பு

    இதையடுத்து நேற்று காலையில் சுப்பிரமணி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். 2 மணி நேரம் கழித்து மீண்டும் அவர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடி, மோதிரம் உள்பட 5 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது.

    இதுபற்றி மங்களபுரம் போலீசில் சுப்பிரமணி புகார் அளித்தார். அதன்பேரில் மங்களபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • கேமராவில் பதிவான நபருக்கு வலை வீச்சு
    • அடகு வைத்த நகையை மீட்டு வந்தபோது துணிகரம்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணியரசன் (வயது 33), டிரைவர். இவர் நேற்று தனக்கு சொந்தமான 3 பவுன் நகையை தெள்ளாரில் உள்ள தேசிய மயக்கமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்தார்.

    அதில் கிடைத்த ரூ.93 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வந்தவாசி சன்னதி தெருவில் உள்ள மற்றொரு வங்கியில் ஏற்கனவே அடகு வைத்த பவுன் நகையை மீட்டார்.

    பின்னர், நகையை தனது பைக்கின் சீட் அடியில் வைத்துக் கொண்டு தெள்ளார் வந்தார். அங்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்த நகைக்கான ரசீது பெற வங்கி முன்பாக பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.

    அங்கு ரசீது வாங்கிக் வெளியே வந்தார். அப்போது, பைக் சீட்டின் லாக் உடைக்கப்பட்டு அதிலிருந்து 4 பவுன் நகைகளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணியரசன் தெள்ளார் போலீசில் தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் இன்ஸ் பெக்டர் ரேகாமதி, எஸ்ஐ சக்திவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

    அதில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலையில் தொப்பி அணிந்தபடி முகம் தெரியாமல் இருக்க மாஸ்க் அணிந்து கொண்டு பைக்கில் இருந்த நகையை திருடியது தெரிந்தது. நகை திருடி சென்ற நபர் பைக்கில் வந்தவாசி சாலை நோக்கி சென்றது கேமராவில் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து வந்தவாசி, தேசூர், ஏம்பலம், ஜப்திகாரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • நகையை பறிகொடுத்து படுகாயம் அடைந்த லதா மதுரை கூடல்புதூர் போலீசில் புகார் கொடுத்தார்.
    • வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட தபால் தந்தி நகர் வைகை நதி தெருவைச் சேர்ந்தவர் திலக்குமார் என்பவரது மனைவி லதா (வயது 40). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் லேசான மழை பெய்துகொண்டிருந்த நிலையில் லதா பணியை முடித்து விட்டு தனது மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வந்தனர். ஆனால் அதனை லதா கவனிக்கவில்லை. லதாவின் அருகில் நெருங்கி வந்த மர்மநபர்கள் திடீரென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயினை இழுத்து பறித்தனர்.

    இதனை சற்றும் எதிர்பாராத அவர் தனது வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். மொபட்டில் இருந்து லதா கீழே விழுந்த நிலையிலும் அதனை சற்றும் கண்டுகொள்ளாமல் தரதரவென அவரை சாலையில் இழுத்தபடி செயினை அறுத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

    நகையை பறிகொடுத்து படுகாயம் அடைந்த லதா மதுரை கூடல்புதூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர்கள் லதாவை தரதரவென்று சாலையில் இழுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

    கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி கமிஷனர் ஜமால், இன்ஸ்பெக்டர் சுந்தரி, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    மதுரையில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் இதுபோன்று சென்று பெண்ணிடம் ஈவு இரக்கமின்றி தரதரவென இழுத்துச் சென்று தாலி செயினை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என கூறி பிளம்பிங் வேலை செய்வதற்காக வீட்டு சாவி வேண்டும் என சென்னையில் இருந்த ஓய்வுபெற்ற ஆசிரியை செல்வியிடம் கேட்டுள்ளனர்.
    • கொள்ளை குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாதா கோவில் அருகே தெற்கு பீச் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் திருமணி (வயது 65). இவரது மனைவி செல்வி, ஓய்வுபெற்ற ஆசிரியை.

    இவர்களது மகளுக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சில மாதங்களுக்கு முன் சென்று விட்டனர்.

    இந்நிலையில் அவர்களது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த ஜெய்ஸ் (32), அவரது மனைவி ஆஷா (29) ஆகியோர் வீட்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என கூறி பிளம்பிங் வேலை செய்வதற்காக வீட்டு சாவி வேண்டும் என சென்னையில் இருந்த ஓய்வுபெற்ற ஆசிரியை செல்வியிடம் கேட்டுள்ளனர்.

    இதனால் பக்கத்து வீட்டில் இருந்த சாவியை கொடுக்க சொல்லி அவர்கள் கூறியதும் அதனை வாங்கிக் கொண்டு பிளம்பிங் வேலை பார்த்துள்ளனர். அந்த சமயத்தில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு வீட்டு உரிமையாளர் ஆசிரியை வீட்டில் இருந்த 27 பவுன் தங்க நகைகளை திருடி உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் தூத்துக்குடிக்கு வந்த திருமணி, செல்வி தம்பதியினர் வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த ஆஷா,ஜெய்ஷ் ஆகிய இருவரும் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் இன்று கைது செய்த போலீசார், 27 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நகைகளை ஊழியர்கள் சரி பார்த்தபோது ஒரு பவுன் ‘பிரேஸ்லெட்’ மாயமாகி இருந்தது.
    • வடபழனி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போரூர்:

    வடபழனி, ஆற்காடு சாலையில் நகை கடை நடத்தி வருபவர் கவுதம் ஜெயின். இவரது கடைக்கு "டிப் டாப்" உடையில் 2 பெண்கள் வந்தனர். அவர்கள் நகைகள் வாங்குவது போல் பார்த்துவிட்டு பின்னர் நாளை வருவதாக கூறிச்சென்று விட்டனர்.

    பின்னர் நகைகளை ஊழியர்கள் சரி பார்த்தபோது ஒரு பவுன் 'பிரேஸ்லெட்' மாயமாகி இருந்தது. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது நகை வாங்குவது போல் வந்த 2 இளம்பெண்களும் நகையை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து வடபழனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்பகோணத்தை சேர்ந்த லோகநாயகி, மயிலாடு துறையை சேர்ந்த சுதா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    • இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற சுப்புலட்சுமியிடம் விசாரித்தனர்.
    • பீரோவை திறக்க முடியாததால் அதன் சாவி தொலைந்து விட்டதாக கூறி பீரோவை பழுது பார்க்கும் நபரை வரவழைத்து நகையை திருடி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை, புச்சம்மாள் தெருவை சேர்ந்தவர் பூமாதேவி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் தமிழரசி. இவரை சந்திக்க தண்டையா ர்பேட்டை சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் அவரது மருமகள் சுப்புலட்சுமி (28) அடிக்கடி வந்து சென்றார். அப்போது பூமாதேவியுடன், சுப்புலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி பூமாதேவி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த 10 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது. ஆனால் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்படவில்லை. இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற சுப்புலட்சுமியிடம் விசாரித்தனர். அப்போது அவர் பூமாதேவி வீட்டில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். பூமாதேவியின் வீட்டுக்கு சென்ற போது கதவு பூட்டு சாவியை சுப்புலட்சுமி திருடி வைத்து கொண்டார். பின்னர் பூமாதேவி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற நேரத்தை நோட்டமிட்டு கதவை திறந்து சென்று உள்ளார். ஆனால் பீரோவை திறக்க முடியாததால் அதன் சாவி தொலைந்து விட்டதாக கூறி பீரோவை பழுது பார்க்கும் நபரை வரவழைத்து நகையை திருடி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சுப்புலட்சுமியை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

    ×