பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

திருமங்கலம் அருகே பஸ்சில் பெண்ணிடம் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு
Published on

திருமங்கலம்

திருமங்கலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அமர்நாத். இவரது மனைவி காயத்ரி (வயது 30) சென்னை ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனால் அவர் மட்டும் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் உறவினர் திருமணத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு காயத்ரி திருமங்கலத்திற்கு வந்தார். அவர் கள்ளிக்குடியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்று விட்டு, மீண்டும் திருமங்க லத்திற்கு அரசு டவுன் பஸ்சில் திரும்பி வந்தார்.

தான் அணிந்திருந்த நகை களை பாதுகாப்புக்காக கழற்றி பைக்குள் வைத்தி ருந்தார். இந்தநிலையில் திருமங்கலம் பஸ் நிலை யத்தில் இறங்கியபோது அவரது பை திறந்திருந்தது. உள்ளே பார்த்தபோது, பையில் வைத்திருந்த 7½ பவுன் தங்கச்செயினை காணவில்லை.

யாரோ மர்ம நபர்கள் ஓடும் பஸ்சிலேயே காயத் ரியின் பையில் இருந்த தங்கச்செயினை நைசாக திருடிச்சென்று 

X

Maalai Malar
www.maalaimalar.com