செய்திகள்

கவுரி லங்கேஷ் கொலை விவகாரம்: ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு

Published On 2017-09-19 03:31 GMT   |   Update On 2017-09-19 03:31 GMT
கவுரி லங்கேஷ் கொலை விவகாரம் குறித்து ராகுல் காந்தி மீது ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
மும்பை:

பெங்களூருவில் மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், கடந்த 6-ந் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பேட்டி அளித்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ்.சை தொடர்புபடுத்தி பேசியதாக அவர் மீது ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான திரித்துமன் ஜோஷி என்ற வக்கீல், மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீதும் அவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இருவரும் எந்த ஆதாரமும் இல்லாமல், ஆர்.எஸ்.எஸ்.சின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பேசியதாக ஜோஷி தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மனு, அக்டோபர் 22-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.
Tags:    

Similar News