செய்திகள்

எல்லையில் பாக். ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல்: இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழப்பு

Published On 2017-07-12 18:34 GMT   |   Update On 2017-07-12 18:34 GMT
காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே நேற்று மாலை முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி மற்றும் சிறிய ரக பீரங்கிகளால் இந்திய நிலையை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இந்திய பாதுகாப்பு படையினரும் பாகிஸ்தான் நிலைகளை தாக்கினர்.

இரு தரப்புக்கும் பல மணிநேரங்களாக சண்டை தொடர்ந்து நடைபெற்றது. பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் ரஞ்சித் சிங், சதிஸ் பகாத் ஆகிய இரண்டு இந்திய வீரர்கள் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், எல்லையில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News