கதம்பம்

ஓய்வு தரும் நலம்

Published On 2022-09-17 08:01 GMT   |   Update On 2022-09-17 08:01 GMT
  • உடலில் ஒவ்வொரு உறுப்புகளும் பிரபஞ்சத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.
  • அந்த பிரபஞ்சம் உடல் உறுப்புகளின் வழியே நம்மோடு பேசும்.

ஓய்வுக்கு மாற்றமாக மருத்துவத்தை தேடுபவர்கள் தான் நிரந்தர நோயாளியாகிறார்கள்.

ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.. வருடத்தில் 365 நாட்களும் ஆரோக்கியமாக இருக்கமுடியாது.

உலகில் ஒவ்வொரு உயிரும் உடலும் தனிதன்மையானது, ஒவ்வொரு உடலில் ஏற்படும் உடல் தொந்தரவுகளும் தனிதன்மையான காரணத்தால்தான் ஏற்பட்டிருக்கும்.

இந்த நோய்களுக்கெல்லாம் பெயர் வைத்து வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதை விட சிறிது நாட்கள் ஓய்வு எடுத்து பாருங்கள், இயற்கையின் குணமாக்குதல் புரியும்.

உடலுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு புரிந்தாலே உங்கள் தனிதன்மையான நோய்க்கு உங்கள் உடலே மருத்துவர்.

உடலில் ஒவ்வொரு உறுப்புகளும் பிரபஞ்சத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. அந்த பிரபஞ்சம் உடல் உறுப்புகளின் வழியே நம்மோடு பேசும். ஓய்வில் மட்டும்தான் இதை உணரமுடியும்.

எதிர்காலம் என்னவாகும் என்று நம் அறிவுதான் நம்மை பயமுறுத்தி கொண்டே இருக்கும். நேரம் பார்த்து வேலை செய்ய சொல்வதும் இந்த உலக அறிவுதான். இந்த அறிவை கொஞ்சம் கழற்றி வைத்து விட்டு ஓய்வெடுத்து கொண்டே பிரபஞ்சத்தோடு பேசி பாருங்கள். உடல் உறுப்புகளின் வழியே பிரபஞ்சமும் நம்மோடு பேசும். நிரந்தர நோயாளியாவதையும் தவிர்க்கலாம்.

ஆழ்மனதின் அற்புத சக்தியை புரிந்துகொண்டாலே குணமாக்குதல் தன்னாலே நடக்கும் இதற்கு தேவையும் ஓய்வுதான்.

-ரியாஸ்

Tags:    

Similar News

தம்பிடி