உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கேரவன்களை படத்தில் காணலாம்.

ராகுல் காந்தி பாதயாத்திரை- படுக்கையறை, சமையலறை வசதியுடன் 60 கேரவன்கள் கன்னியாகுமரி வருகை

Published On 2022-09-05 05:03 GMT   |   Update On 2022-09-05 06:26 GMT
  • வருகிற 7-ந்தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து ராகுல் காந்தி தனது நடை பயணத்தை தொடங்குகிறார்.
  • நடை பயணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி தொடங்கி வைக்கிறார்.

கன்னியாகுமரி:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தேச ஒற்றுமை பயணம் என்ற பாதயாத்திரை மேற்கொள்கிறார். வருகிற 7-ந்தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து அவர் தனது நடை பயணத்தை தொடங்குகிறார். நடை பயணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை அவரிடம் வழங்கி தொடங்கி வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலுக்கு நடந்தே செல்கிறார். அங்கு நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பிறகு அவர் நடை பயணத்தை தொடங்குகிறார். இரவு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரியில் தங்குகிறார். ராகுல் காந்தியும் அவருடன் பாத யாத்திரை செல்லும் காங்கிரஸ் தலைவர்களும் தங்குவதற்காக படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிவறை மற்றும் அனைத்து வசதிகள் கொண்ட குளுகுளு வசதியுடன் கூடிய கேரவன்கள் பயன்படுத்தப்படுகிறது.

இதற்காக 60 கேரவன்கள் கன்னியாகுமரிக்கு வந்து உள்ளது. இந்த 60 கேரவன்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை செல்லும் போது அவர்களை பின் தொடர்ந்து செல்லும். எங்கெல்லாம் இரவு ராகுல் காந்தியும் பாதயாத்திரை குழுவினரும் தங்குகிறார்களோ அங்கு இந்த கேரவன்கள் நிறுத்தி வைக்கப்படும்.

Tags:    

Similar News