தமிழ்நாடு

கஞ்சா விற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

Published On 2024-05-25 07:18 GMT   |   Update On 2024-05-25 07:18 GMT
  • போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
  • குடும்பத்துடன் அப்பகுதியில் சுற்றித்திரிந்து சிறுவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்ததும் தெரிய வந்தது.

வருசநாடு:

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே கணேசபுரம் மெயின்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கண்டமனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்கேத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர்கள் கண்டமனூர் தெற்கு தெருவை சேர்ந்த பூவநாதன் மனைவி ரத்தினம்மாள் (70), அவரது மகன் பழனிச்சாமி, மருமகள் முருகேஸ்வரி என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் குடும்பத்துடன் அப்பகுதியில் சுற்றித்திரிந்து சிறுவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் 90 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News