உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே வீட்டை விட்டு சென்ற 10-ம் வகுப்பு மாணவன் மாயம்

Published On 2022-07-29 07:58 GMT   |   Update On 2022-07-29 07:58 GMT
  • சின்னசேலம் அருகே வீட்டை விட்டு சென்ற 10-ம் வகுப்பு மாணவன் மாயமானார்.
  • வெகு நேரமாகியும் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பெருமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஐயங்குட்டி. விவசாயி. இவரது மகன் முனியன் (வயது 15)பெருமங்கலத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் கடந்த 26. 7. 2022 ஆம் தேதி அன்று வழக்கம் போல் காலை காலைக்கடன் முடிப்பதற்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு எங்கு தேடியும் கிடைக்காததால் கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து மாணவன் முனியனை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News