முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட சாதனை துண்டு பிரசுரம்
- முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட சாதனை துண்டு பிரசுரம் திருமங்கலத்தில் வினியோகம் செய்யப்பட்டது.
- மாவட்ட செயலாளர் மணிமாறன் ஏற்பாட்டில் தி.மு.க.வினர் வினியோகம் செய்தனர்.
திருமங்கலம்
தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் சரித்திர சாதனையை பொது மக்களிடம் கொண்டு சென்றிடும் வகையில் பள்ளியில் பசியாறு எனும் சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருமங்கலத்தில் நடந்தது.
மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் ஏற்பாட்டின் பேரில் பொதுமக்களிடம் தி.மு.க.வினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். திருமங்கலம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு பொமக்களிடம் துண்டு பிரசுரங்களை நேரில் விநியோகம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன்,பொருளா ளர் பொடா.நாகரா ஜன், மாவட்ட அணி அமை ப்பாளர்கள் மதன்குமார், பாசபிரபு,திருமங்கலம் நகர கழகச் செயலாளர் ஸ்ரீதர்,திருமங்கலம் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை தலை வர் ஆதவன்அதியமான், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முத்துக்குமார், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.