- மதுரை அருகே கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்.
- எஸ்.காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
மதுரை
மதுரை எஸ்.எஸ்.காலனி சமட்டிபுரம் மெயின் ரோடு, பள்ளிக்கூடம் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் எஸ்.எஸ்.காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த அச்சம்பத்து, சந்தானம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 19) என்பவர் 50 கிராம் கஞ்சாவுடன் பிடிபட்டார்.
இதேபோல் மதுரை விராட்டிபத்து சுடுகாடு அருகே 25 கிராம் கஞ்சாவுடன் சமட்டிபுரம், பாண்டி கோவில் தெருவை சேர்ந்த ரஞ்சித் குமார் (26) என்பவரை எஸ்.எஸ்.காலனி போலீசார் பிடித்தனர். அவர்கள் இருவரும் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
மதுரை வண்டியூர் தியேட்டர் பின்புறம் கஞ்சா விற்கப்படுவதாக அண்ணா நகர் போலீசுக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பதுங்கி இருந்த வாலிபரை பிடித்தனர். அவரிடம் இருந்து 45 கிராம் கஞ்சா மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் அவர் கஞ்சா வைத்திருந்த வாலிபர் சிவகங்கை மாவட்டம், கட்டமான்கோட்டை பகுதியைச் சேர்ந்த நீலமேகம் என்ற பண்டாரி (35) என்று தெரிய வந்தது. அவரை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர்.