உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

படைவெட்டி மாரியம்மன் கோவிலில் கோடாபிஷேக அலங்கார உற்சவம்

Published On 2023-05-29 09:49 GMT   |   Update On 2023-05-29 09:49 GMT
  • அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
  • இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்று, முளைப்பாரி எடுத்து வரப்பட்டது.

சுவாமிமலை:

கும்பகோணம் அருகே மேலக்காவிரி படைவெட்டி மாரியம்மன் கோவிலில் 68-ம் ஆண்டு கோடாபிஷேக அலங்கார உற்சவம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் காவிரியில் இருந்து பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர், அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து, இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்று, முளைப்பாரி எடுத்து வரப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

Tags:    

Similar News