உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது பாறை விழுந்து சிறுவன் பலி

Published On 2024-05-27 07:33 GMT   |   Update On 2024-05-27 08:35 GMT
  • சிறுவர்கள் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒகேனக்கல்:

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன்-சவுந்தர்யா தம்பதியினர். இவருடைய மகன்கள் பவின் (வயது 10), சுதீப் (8) இவர்கள் 2 பேரும் ஊட்டமலை முனியப்பன் கோவில் அருகே உள்ள தடுப்பணை ஓடையில் விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்ப்பட்டது. இதனால் அந்த பகுதியில் இருந்த பெரியபாறை விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுவர்கள் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே பவின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் சுஜித் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News