உள்ளூர் செய்திகள்
தடை செய்யப்பட்ட புகையிலை

தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது

Published On 2022-05-31 07:52 GMT   |   Update On 2022-05-31 07:52 GMT
தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை, சொக்கலிங்கபுரம், எம்.டி.ஆர். நகர் 2-வது தெருவை  சேர்ந்தவர் ரமேஷ். இவர் திருச்சுழி  சாலையில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். 

இந்த கடையில்  அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்று வருவதாக நகர் காவல் துறையினருக்கு    தகவல்  வந்தது. இதன் பேரில்  சார்பு ஆய்வாளர் தாமரைக்கண்ணன், தலைமை காவலர் அன்பழகன் ஆகியோர் கடையை சோதனை செய்தனர். 

அப்போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 10 கிலோ எடையுள்ள புகையிலையை  இருந்தது. அதை பறிமுதல் செய்து ரமேசை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலையின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.
Tags:    

Similar News