search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "banned"

    • ரொனால்டோவை நோக்கி எதிரணி ரசிகர்கள் மெஸ்சி.... மெஸ்சி என்று கோஷம் எழுப்பினர்.
    • இதை கேட்டு எரிச்சல் அடைந்த ரொனால்டோ ரசிகர்களை நோக்கி கையால் ஆபாச சைகை காட்டினார்.

    ரியாத்:

    போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவைச் சேர்ந்த அல்- நாசர் கிளப்புக்காக விளையாடி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சவுதி புரோ லீக் கால்பந்தில் அல்-நாசர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் அல் ஷபப்பை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தின்போது ரொனால்டோவை நோக்கி எதிரணி ரசிகர்கள் மெஸ்சி.... மெஸ்சி என்று கோஷம் எழுப்பினர். இதை கேட்டு எரிச்சல் அடைந்த ரொனால்டோ ரசிகர்களை நோக்கி கையால் ஆபாச சைகை காட்டினார்.

    இது குறித்து விசாரித்த சவுதி அரேபியா கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி, ரொனால்டோவுக்கு அடுத்த லீக் போட்டியில் விளையாட தடையும், ரூ.4½ லட்சம் அபராதமும் விதித்தது.

    இதனால் ரொனால்டோ நேற்று நடைபெற்ற அல் நாசர் - அல் ஹஸ்ம் இடையிலான போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதன் மூலம் இவரது தடை நேற்றுடன் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

    • இந்த தடைக்காலத்தில் அவரால் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாது.
    • அஞ்சலி தேவி கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தோகா சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை அஞ்சலி தேவி சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தால் தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் உள்ள ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட சோதனையில், அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இந்த நிலையில், அஞ்சலி தேவிக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (NADA) உத்தரவிட்டுள்ளது. இந்த தடைக்காலத்தில் அவரால் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாது. இதற்கு முன் அஞ்சலி தேவி கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தோகா சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகள் உள்பட பல கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகள் உள்பட பல கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது.

    தீவிர நடவடிக்கை

    இதையடுத்து உணவு பாதுகாப்பு ஆணையர் தலைமையில் சென்னையில் நடந்த கூட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தீவிரமாக கண்காணித்து சீல்வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் தனிப்படை போலீசார் புகையிலை பொருட்கள் விற்கப்படும் கடைகளை கண்காணித்து சமீபத்தில் அதிரடி சோதனை செய்தனர். அதில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த 13 கடை உரிமை யாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த கடைகளுக்கு சீல் வைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் சேலம் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து ஆட்டையாம்பட்டியில் ஒரு மளிகை கடை, ஓமலூர் அருகே செலவடையில் ஒரு மளிகை கடை, எடப்பாடி, ஜலகண்ட ாபுரம் பிரதான சாலையில் ஒரு மளிகை மற்றும் ஒரு பீடா கடை, பெரியசோரகை மாட்டுக்காரன் வளைவில் 2 பெட்டிக்கடைகள், நங்கவள்ளியில் ஒரு பெட்டிக்கடை உள்பட 13 பெட்டி கடைகளுக்கும் சீல் வைக்கும் நடவடிக்கையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    இன்றும், நாளையும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ள தால் தற்போது அந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதையடுத்து நாைள மறுநாள் திங்கட் கிழமை முதல் இந்த 13 கடைகளும் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதிகாரி பேட்டி

    இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கதிரவன் கூறுகையில், கடந்த 2022-2023-ம் ஆண்டில் 33 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 800 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் புகையிலை விற்று கடை உரிமையாளர்கள் சிக்கினால் அந்த கடைகள் சீல் வைக்கப்படுவதுடன், கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும், அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் 13 கடைகள் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இவ்வாறு அவர் கூறினார். 

    • கல்வீரம்பாளையத்தில் 9 கடைகள் மூடப்பட்டன.
    • மளிகை கடைகளில் ஆய்வு செய்து, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கோவை,

    கோவையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் 100 மீட்டர் தூரத்துக்குள் சிகரெட், பீடி, குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்கும் பெட்டிக்கடைகள் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்ற கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டிருக்கிறார்.

    கோவையில் மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி வருவது அதிகரித்திருப்பது சமீபத்தில் எடுத்த ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, மாவட்ட அளவில் ஒவ்வொரு பள்ளிக்கும் அருகில் 100 மீட்டர் தூரத்துக்குள் பெட்டிக்கடைகள் இருக்கிறதா என கணக்கெடுக்கப்பட்டது.

    துடியலூர், தொண்டாமுத்தூர், மதுக்கரை, ஆலாந்துறை, வடவள்ளி, கிணத்துக்கடவு, காருண்யா நகர், க.க.சாவடி, கருமத்தம் பட்டி, செட்டிபாளையம், கோவில்பாளையம், சுல்தான்பேட்டை, சூலூர், பொள்ளாச்சி, கோமங்கலம் என அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள பெட்டிக்கடைகள் பட்டியலிடப்பட்டன. மொத்தம், 256 இடங்களில் பெட்டிக்கடைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இவற்றை அந்தந்த உள்ளாட்சி அமைப்பினர் நேரில் ஆய்வு செய்து போதை பொருட்கள் விற்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு விற்பது உறுதியானால் உடனடியாக பெட்டிக்கடைகளை அகற்ற வேண்டும் அல்லது மூடி சீல் வைக்க வேண்டுமென கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கல்வீரம்பாளையம் மற்றும் வடவள்ளி பகுதிகளில், உதவி நகரமைப்பு அலுவலர் பாபு தலைமையிலான குழு நேற்று கள ஆய்வு செய்தது. கல்வீரம்பாளையத்தில் 9 கடைகள் மூடப்பட்டன. இதில் இரு பெட்டிக்கடைகள் அகற்றப்பட்டன. மளிகை கடைகளில் ஆய்வு செய்து, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் மற்ற உள்ளாட்சி அமைப்புகளும் குழுக்கள் அமைத்து பெட்டிக்கடைகளில் ஆய்வு நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    • தாராபுரம் சாலையில் உள்ள திருமண மண்டப வளாகத்தில் ஆய்வு நடந்தது.
    • டிரைவர்களுக்கு கண் மற்றும் முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளிக்கூட பஸ்களுக்கான போக்குவரத்து ஆய்வு, தாராபுரம் சாலையில் உள்ள திருமண மண்டப வளாகத்தில் நடந்தது.

    உதவி கலெக்டர் பிரியங்கா, வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் கோகுலகிருஷ்ணன், செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது டிரைவர்களுக்கு கண் மற்றும் முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை வட்டாரத்தில் உள்ள 66 தனியார் பள்ளிக்கூடங்களில் 374 பஸ்கள் இயங்கி வருகின்றன.

    அந்த வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். அப்போது 30 வாகனங்களில் கண்காணிப்பு காமிரா, வேகக்கட்டுப்பாடு கருவி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி ஆகியவை இடம்பெறாதது தெரியவந்தது.

    படிக்கட்டுகளிலும் உறுதித்தன்மை இல்லை. எனவே அந்த வாகனங்களை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் தற்காலிக தடை விதித்து உள்ளனர்.

    அப்போது பள்ளிக்கூட வாகனங்களில் மேற்கண்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி அந்த வாகனங்களை மீண்டும் தணிக்கைக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

    • சாலையின் ஓரங்களில் அதிகாலை நேரத்தில் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது.
    • புகை காற்று மாசு சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

    உடுமலை :

    நோய் நொடி இல்லாத நீண்ட ஆரோக்கியத்திற்கு தூய்மையான காற்றும் சுகாதாரத்துடன் கூடிய சுற்றுச்சூழலும் முக்கியமாகும். ஆனால் உடுமலை நகராட்சி பகுதியில் நிலைமை தலைகீழாக உள்ளது.

    ஆங்காங்கே அலட்சிய போக்கோடு பிளாஸ்டிக் கழிவுகள் குவிக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காற்று மாசு, சுற்றுச்சூழல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில்:- சுகாதாரமான காற்றை பெற்று ஆரோக்கியத்துடன் திகழ சம்மந்தப்பட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே சாத்தியமாகும்.ஆனால் உடுமலை பகுதியில் சாலையின் ஓரங்களில் அதிகாலை நேரத்தில் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது.அதில் இருந்து வீசக்கூடிய துர்நாற்றம், புகை காற்று மாசு சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.இதனால் நடைபயிற்சி உடற்பயிற்சி செய்பவர்கள், மாணவர்கள்,பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அத்துடன் அருகில் உள்ள வீடுகளில் வசித்து வருகின்ற பொதுமக்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கும் ஆளாகி வருகின்றனர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும் கண்டு கொள்வதில்லை.இதனால் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படும் சம்பவம் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    எனவே உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை தீ வைத்து எரிப்பதற்கு முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும்.மேலும் உடல் மற்றும் சுற்றுப்புற சுகாதார நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை உடுமலை பகுதியில் முற்றிலுமாக தடை செய்வதற்கு அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • அபாயகரமான 6 வகை பூச்சிக்கொல்லி மருந்துகளை 60 நாட்களுக்கு தற்காலிகமாக அரசு தடை விதித்துள்ளது.
    • மஞ்சள் பாஸ்பரஸ் (ரேடால்) எலி மருந்து நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை வேளாண் இணை இயக்குனர் முருகானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வேளாண் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அபாயகரமான 6 வகை பூச்சிக்கொல்லி மருந்துகளை 60 நாட்களுக்கு தற்காலிகமாக அரசு தடை விதித்துள்ளது.

    இதன்படி அசிபேட், மோனோ குரோடோபாஸ், குளோரி பைரிபாஸ், புரோபனோபாஸ், குளோரி பைரிபாஸ், சைபர் மெத்ரின், புரோபனோபாஸ், குளோரி பைரிபாஸ் ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகள் மார்ச் 1-ந்தேதி முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரை 60 நாட்களுக்கு அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

    இதேபோல் 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் (ரேடால்) எலி மருந்து நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பூச்சிக்கொல்லி விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இந்த 6 பூச்சிக்கொல்லி மருந்துகளை தடையை மீறி விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் நெல்லை மாவட்டத்தில் 39 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு ரூ.3 லட்சத்து 46 ஆயிரத்து 45 செலவில் பூச்சிக்கொல்லி களுக்கு 13 விற்பனை நிலையங்களில் விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 814.8 மில்லி மீட்டர் ஆகும்.
    • விவசாயிகள் சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்து பயனடைய வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிசான பருவத்தில் நடவு செய்யப்பட்ட 24 ஆயிரத்து 409 ஹெக்டேர் நெல் சாகுபடி பரப்பில், 17,500 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி முடிந்துள்ளது.

    விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஊக்கத்தொகையுடன் கூடிய ஆதார விலையாக முதல் ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,160-ம், சாதாரண வகை நெல்லுக்கு ரூ.2,115-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகள் தங்கள் நிலங்களில் மண் வளத்தை பெருக்கிட குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து தங்கள் நிலங்களுக்கு பயன்படுத்தும் பொருட்டு சென்ற ஆண்டு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் 251 குளங்கள் தேர்வு செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 56 கிராம பஞ்சாயத்துக்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு தென்னங் கன்றுகள், விசை தெளிப்பான் உள்ளிட்ட இடு பொருட்கள் ரூ.62 லட்சம் மதிப்பில் 21 ஆயிரத்து 932 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 814.8 மில்லி மீட்டர் ஆகும். இந்த மாதம் வரை பெற வேண்டிய மழை அளவு 121.7 மில்லி மீட்டர் ஆகும். ஆனால் இதுவரை 58.88 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. எனவே விவசாயிகள் குறைந்த நீரினை பயன்படுத்தி நீர் மேலாண்மை முறைகளான சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் ஆகிய உத்திகளை கையாண்டு சாகுபடி செய்ய வேண்டும்.

    இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அனுசரிக்கப்படுவதால் விவசாயிகள் தண்ணீர் குறைவாக பயன்படுத்தப்படும் சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்து பயனடைய வேண்டும்.

    மாவட்டத்தில் 267 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளது. இங்கு இதுவரை 1,620 விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் 39 மாதிரிகள் தரமற்றதாக தெரிய வந்துள்ளது.

    37 விதை விற்பனை உரிமையாளர்கள் மீது துறை நடவடிக்கையும், 2 விற்பனையாளர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விற்பனைக்கு வைக்கப்பட்ட 57.76 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.77.50 லட்சம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமார், சப்-கலெக்டர் சபிர் ஆலம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பாஸ்பரஸ் எலி மருந்து பயன்படுத்த நிரந்தர தடை
    • புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை

    புதுக்கோட்டை,

    அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செ்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, ெபாது மக்கள் நலன் கருதி அபாயகரமான மோனோ குரோட்டோபாஸ், ப்ரோபெனோபோஸ், அசிபேட், குளோர் பைரிபாஸ், ப்ரோபெனோ போஸ் 10 சைபர்மெத்ன், குளோர்பைரிபாஸ் 10 சைபர்மெத்ரின் ஆகிய 6 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகைள, கடந்த 1-ந் தேதி முதல் 60 நாட்களுக்க விற்பனை செய்வதற்கு தற்காலிக தடை விதித்தும், 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் எலி விஷ மருந்தை பயன்படுத்த நிரந்தர தடை விதித்தும் தமிழக அரசு உத்தரவிட்டது.இத்தகைய பூச்சிக் கொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பூச்சிக் கொல்லி மருந்து விற்பனையாளர்கள், 60 நாட்களுக்கு இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோ தடை விதிக்கப்படுகிறது. ஆய்வின்போது, தடையை மீறியது கண்டறியப்பட்டாலோ அல்லது புகார் வரப் பெற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • பாப்பாபட்டி ஓச்சாண்டம்மன் கோவிலில் சிவராத்திரி திருவிழா போலீஸ் பாதுகாப்புடன் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
    • இரு தரப்பினருக்கிடையே சமரசம் ஏற்படாததால் வருவாய் துறையின் மூலம் திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி ஓச்சாண்டம்மன் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் பெட்டி தூக்குவது குறித்து 8 மற்றும் 2, 10 தேவர்கள் வகையறாவுக்கும், 5 பூசாரி வகையறாவுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது.

    இைதயடுத்து பூசாரி மற்றும் கோவில் நிர்வாகியிடம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச பேச்சு வார்த்தை நடந்தது. கோட்டாட்சியர் சங்கரலிங்கம், வட்டாட்சியர் சுரேஷ் பிரெடரிக் கிளமெண்ட், போலீஸ் டி.எஸ்.பி. நல்லு ஆகியோர் பங்கேற்றனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து வருவாய் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் கோவிலை திறந்து வைத்து பக்தர்களுக்கு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர்.

    மேலும் பெரிய பூசாரி தேர்வு செய்வதில் பூசாரி தரப்பினருக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால் பெட்டி தூக்கும் திருவிழாவும் நிறுத்தி வைக்கப்பட்டது.

    பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் திருவிழா கோர்ட்டு உத்தரவுப்படி நடத்த இரு தரப்பினருக்கிடையே சமரசம் ஏற்படாததால் வருவாய் துறையின் மூலம் திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்யப்படும். அதற்கு காவல் துறையினரின் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    • பண்டிகை நாட்களில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க பொதுச் செயலாளர் ராஜமருது, மதுரை கலெக்டரிடம் கொடுத்தார்.
    • தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.

    மதுரை

    அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க பொதுச் செயலாளர் ராஜமருது, மதுரை கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் தை மாதம் முதல் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் வீடுகள் முன்பு பொங்கல் வைத்து குலதெய்வ வழிபாடு நடத்துவது வழக்கம்.

    தைமாதம் 2-ம் நாள் மாட்டுப்பொங்கல் ஆகும். அவனியாபுரத்தில் தை மாதம் முதல் நாள் (15-ந் தேதி) பொங்கல் அன்றும், 2-ம் நாள் (16-ந் தேதி) மாட்டுப்பொங்கல் அன்று பாலமேட்டிலும், தை மாதம் 3-ந் தேதி அலங்கா நல்லூரிலும் ஜல்லிகட்டு நடத்தப்படுகிறது.

    பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்குவது, தமிழக மக்களின் கலாச்சாரம்- பண்பாடுகளை சீர்கு லைக்கும் செயல் ஆகும். அப்படி செய்வதால்தை மாதம் பொங்கல் வைத்து குல தெய்வ வழிபாடுகள், முறையாக நடத்தப்படுவதில்லை.

    ஐல்லிக்கட்டுக்கு முதல் நாளே அனைத்து கிராமங்களிலும் ஜல்லி கட்டு காளைகளின் உரிமையாளர்கள், உறவினர்கள், மாடுபிடி வீரர்கள் பொங்கல் நிகழ்ச்சிகளை அடியோடு புறக்கணித்து விடுகின்றனர். இதனால் புதிய கலாச்சார சீரழிவு உருவாக்கப்பட்டு வருகிறது.

    தமிழக மக்களின் இனம் மொழி கலாச்சாரம், பாராம் பரியம், பண்பாடுகளை பாதுகாக்கும் வகையில் பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் ஆகிய பண்டிகை நாட்களில் தமிழகம் முழு வதும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை, சொக்கலிங்கபுரம், எம்.டி.ஆர். நகர் 2-வது தெருவை  சேர்ந்தவர் ரமேஷ். இவர் திருச்சுழி  சாலையில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். 

    இந்த கடையில்  அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்று வருவதாக நகர் காவல் துறையினருக்கு    தகவல்  வந்தது. இதன் பேரில்  சார்பு ஆய்வாளர் தாமரைக்கண்ணன், தலைமை காவலர் அன்பழகன் ஆகியோர் கடையை சோதனை செய்தனர். 

    அப்போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 10 கிலோ எடையுள்ள புகையிலையை  இருந்தது. அதை பறிமுதல் செய்து ரமேசை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலையின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.
    ×