உள்ளூர் செய்திகள்
31-ம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி- அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு
மார்ச் 31-ம் தேதிக்குள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பு தங்க நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், கூட்டுறவு வங்கிகளில் 5 லட்சத்துக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தது.
இந்நிலையில், வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பு தங்க நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் கீழ் வரும் வாடிக்கையாளர்களின் பட்டியலையும் தயாரித்து, தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான செயலிலும் அரசு ஈடுபட்டது.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது:-
14.40 லட்சத்து பயனாளிகளுக்கும் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொது நகைக்கடன் வரும் 31-ம் தேதிக்குள் தள்ளுபடி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகை- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு