search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைக்கடன் தள்ளுபடி"

    • 15 பேர் இன்று காலை கலெக்டர் கார்மேகத்திடம் மனு
    • வங்கியில் 5 பவுன் குறைவாக நகை அடகு வைப்பு

    சேலம்:

    சேலம் சித்தர் கோவில் சத்யா நகர் அருகில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 15 பேர் இன்று காலை கலெக்டர் கார்மேகத்திடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் இந்த முகாமில் வசித்து வருகிறோம். மொத்தம் 35 குடும்பங்கள் உள்ளன. கரிச்சிப்பட்டி கூட்டுறவு வங்கியில் 5 பவுன் குறைவாக நகை அடகு வைத்துள்ளோம். தமிழக அரசு 5 பவுனுக்கு குறைவாக வைத்துள்ளவர்களுக்கு கடன் தள்ளுபடி என்று அறிவித்தது. இதையடுத்து அந்த பகுதியில் எங்களை போன்றவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல எங்களுக்கும் நகைக் கடன் தள்ளுபடி செய்து எங்கள் நகைகளை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    • தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 969 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
    • 5 சவரன் வரை நகைக்கடன் பெற்று தற்போது வரை ஒரு லட்சம் பேர் நகை கடனுக்கான உறுதிமொழி பத்திரம் கொடுக்கவில்லை.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 969 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5 சவரன் வரை நகைக்கடன் பெற்று தற்போது வரை ஒரு லட்சம் பேர் நகை கடனுக்கான உறுதிமொழி பத்திரம் கொடுக்கவில்லை. எனவே அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் அவர்களுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்.

    சென்னை அண்ணாநகர், திருமங்கலம், தியாகராயநகர் உள்ளிட்ட 10 ரேஷன் கடைகள், கூட்டுறவு மருந்தகங்களில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தி பொருட்களை பெரும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

    வடகிழக்கு பருவ மழையால் காய்கறி விலை உயர்வு ஏற்பட்டால், பசுமை பண்ணை காய்கறி கடைகளில் குறைந்த விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலெக்டர் தகவல்
    • 23 ஆயிரத்து 578 பேர் பயனடைந்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில், 12 வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சார்பில் 2037 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டிலும், 4 நகர கூட்டுறவு வங்கியின் சார்பில் 4974 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியே 70 ஆயிரம் மதிப்பீட்டிலும், 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் 11 ஆயிரத்து 463 பயனாளிகளுக்கு ரூ.35 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டிலும், 9 நகர கூட்டுறவு சங்கங்களின் சார்பில் 4201 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டிலும், 2 கூட்டுறவு விற்பனை சங்கங்கள் சார்பில் 55 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பீட்டிலும்,

    3 தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் சார்பில் 848 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 23 ஆயிரத்து 578 பயனாளிகளுக்கு 5 சவரன் நகை கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் ரூ.76 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    கடலூர் மாவட்டத்தில் 29 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.114 கோடி நகைக்கடன் தள்ளுபடி: கலெக்டர் தகவல்

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

    தமிழக முதல்-அமைச்சர் கூட்டுறவு நிறுவனங்களில் பொது நகைக்கடன் தள்ளுபடி ஒரு குடும்பத்திற்கு 5 பவுன் மற்றும் அதற்கு கீழுள்ள நகைக்கடன்களை சில தகுதிகளின் கீழ் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதன் படிகடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதன் கிளைகள் நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்ளிட்ட 181 கூட்டுறவு நிறுவனங்களில் அரசு வழிகாட்டுதலின்படி துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் தகுதியான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உரிய முறையில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்கப்பட்டன.இத்திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டத்தில் 29,172 பயனாளிகளுக்கு ரூ.114.25 கோடி மதிப்பீட்டிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் விதிகளை மீறி கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிபவர்கள், மத்திய- மாநில அரசு பணியாளர்கள், ஓய்வூதியர்கள் என 37,984 பேர் பயன் அடைந்திருந்தனர்.
    • இது தற்போதைய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு விதிகளை மீறி நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களின் பட்டியல் தற்போது புள்ளி விவரத்துடன் எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடந்த 2021 மார்ச் 31 வரை 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

    இதன் அடிப்படையில் 14 லட்சத்து 51 ஆயிரத்து 42 பயனாளிகளுக்கு ரூ.5,296 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய கூட்டுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

    அவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டதில் விதிகளை மீறி கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிபவர்கள், மத்திய- மாநில அரசு பணியாளர்கள், ஓய்வூதியர்கள் என 37,984 பேர் பயன் அடைந்திருந்தனர்.

    இது தற்போதைய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு விதிகளை மீறி நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களின் பட்டியல் தற்போது புள்ளி விவரத்துடன் எடுக்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் விதிகளை மீறி தள்ளுபடி பெற்றவர்களின் நகைக்கடன்களை திரும்ப வசூலிக்குமாறு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் 37,984 பேரின் நகைக்கடன்களை வசூலிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் மொத்தம் ரூ.160 கோடி பறிமுதல் செய்ய கூட்டுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இதுகுறித்து தமிழக கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தகுதியற்ற பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால் அதனை ரத்து செய்வதற்கான உத்தரவை உடனே பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் பெற்ற 14.40 லட்சம் பேரின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    • 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்ற பயனாளிகளின் 100 சதவீத நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தகுந்த பயனாளர்களின் பட்டியலும் தயார் செய்யப்பட்டது. பின்னர் ஒவ்வொரு கட்டமாக நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன.

    இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் பெற்ற 14.40 லட்சம் பேரின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்ற பயனாளிகளின் 100 சதவீத நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×