search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டரிடம் இலங்கை அகதிகள் மனு
    X

    கலெக்டரிடம் இலங்கை அகதிகள் மனு

    • 15 பேர் இன்று காலை கலெக்டர் கார்மேகத்திடம் மனு
    • வங்கியில் 5 பவுன் குறைவாக நகை அடகு வைப்பு

    சேலம்:

    சேலம் சித்தர் கோவில் சத்யா நகர் அருகில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 15 பேர் இன்று காலை கலெக்டர் கார்மேகத்திடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் இந்த முகாமில் வசித்து வருகிறோம். மொத்தம் 35 குடும்பங்கள் உள்ளன. கரிச்சிப்பட்டி கூட்டுறவு வங்கியில் 5 பவுன் குறைவாக நகை அடகு வைத்துள்ளோம். தமிழக அரசு 5 பவுனுக்கு குறைவாக வைத்துள்ளவர்களுக்கு கடன் தள்ளுபடி என்று அறிவித்தது. இதையடுத்து அந்த பகுதியில் எங்களை போன்றவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல எங்களுக்கும் நகைக் கடன் தள்ளுபடி செய்து எங்கள் நகைகளை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    Next Story
    ×