search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.76.67 கோடி நகைக்கடன் தள்ளுபடி
    X

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.76.67 கோடி நகைக்கடன் தள்ளுபடி

    • கலெக்டர் தகவல்
    • 23 ஆயிரத்து 578 பேர் பயனடைந்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில், 12 வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சார்பில் 2037 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டிலும், 4 நகர கூட்டுறவு வங்கியின் சார்பில் 4974 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியே 70 ஆயிரம் மதிப்பீட்டிலும், 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் 11 ஆயிரத்து 463 பயனாளிகளுக்கு ரூ.35 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டிலும், 9 நகர கூட்டுறவு சங்கங்களின் சார்பில் 4201 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டிலும், 2 கூட்டுறவு விற்பனை சங்கங்கள் சார்பில் 55 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பீட்டிலும்,

    3 தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் சார்பில் 848 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 23 ஆயிரத்து 578 பயனாளிகளுக்கு 5 சவரன் நகை கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் ரூ.76 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    Next Story
    ×