search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sovereign Jewelry"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் பெற்ற 14.40 லட்சம் பேரின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    • 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்ற பயனாளிகளின் 100 சதவீத நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தகுந்த பயனாளர்களின் பட்டியலும் தயார் செய்யப்பட்டது. பின்னர் ஒவ்வொரு கட்டமாக நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன.

    இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் பெற்ற 14.40 லட்சம் பேரின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்ற பயனாளிகளின் 100 சதவீத நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×