உள்ளூர் செய்திகள்
மிரட்டல்

கபிஸ்தலம் அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Published On 2021-12-17 10:55 GMT   |   Update On 2021-12-17 10:55 GMT
கபிஸ்தலம் அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கபிஸ்தலம்:

அரியலூர் மாவட்டம், காமரசவல்லி புதுக்காலனி தெருவில் வசிப்பவர் சீமான் மகன் பிரபு (வயது 33). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கபிஸ்தலம் அருகே உள்ள கூடலூர் மாதா கோவில் தெருவில் வசிக்கும் தனது அக்கா பிரேமா வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தங்கியிருந்தபோது பிரேமாவிடம் அதே பகுதி மாதா கோவில் தெருவில் வசிக்கும் தேவேந்திரன் என்பவர் தான் கொடுத்த பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளார்.

அதை தட்டிக்கேட்ட பிரபுவை தேவேந்திரன் மற்றும் மதியழகன், ஆனந்தராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பிரபு கபிஸ்தலம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் பாபநாசம் டி.எஸ்.பி பூரணி, இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News