செய்திகள்
முக ஸ்டாலின்

மக்கள் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம்- எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

Published On 2021-05-11 09:43 GMT   |   Update On 2021-05-11 12:54 GMT
கட்சி பாகுபாடின்றி எம்.எல்.ஏ.க்கள் பணியாற்ற வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இல்லாமல் ஒன்றுபட்டு செயல்படுவோம்.
சென்னை:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

* கொரோனா பேரிடரிலிருந்து தமிழகத்தை மீட்க கட்சிகளை கடந்து மக்கள் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம்.

* எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதியில் நோய்தொற்றை தடுக்கும் அரசின் முயற்சிக்கு துணை நிற்க வேண்டும்.



* படுக்கை வசதி, ஆக்சிஜன், மருந்து தேவை நெருக்கடி இருந்தால் உடனே அரசின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும்.

* தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனைவரும் இணைந்து நிற்போம்.

* கட்சி பாகுபாடின்றி எம்.எல்.ஏ.க்கள் பணியாற்ற வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இல்லாமல் ஒன்றுபட்டு செயல்படுவோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News