இந்தியா

விமானப்படை வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது கோழைத்தனமானது- ராகுல் காந்தி

Published On 2024-05-05 01:53 GMT   |   Update On 2024-05-05 01:53 GMT
  • வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு எனது அஞ்சலியை செலுத்துவதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
  • தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுரன்கோட் பகுதியில் விமானப்படை வீரர்களை ஏற்றிக் கொண்டு சென்ற இரண்டு வாகனங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக உதம்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விமானப்படை வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

விமானப்படை வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது கோழைத்தனமானது. வெட்கக்கேடானது மற்றும் வருத்தமளிக்கிறது.

வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு எனது அஞ்சலியை செலுத்துவதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News