செய்திகள்
கைது

காதலுக்கு இடையூறாக இருந்த பெண் கழுத்தை நெறித்து கொலை- சிறுவன் கைது

Published On 2020-09-14 08:19 GMT   |   Update On 2020-09-14 08:19 GMT
கொடைக்கானல் அருகே காதலுக்கு இடையூறாக இருந்த பெண்ணை கழுத்தை நெறித்து கொன்ற 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

பெரும்பாறை:

கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக்காட்டைச் சேர்ந்தவர் சுந்தரி (வயது 31). இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது 11 வயது மகளுடன் வாழ்ந்து வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரது வீட்டிலேயே சுந்தரி வசித்து வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் 21-ந் தேதி வீட்டில் சுந்தரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது சுந்தரியுடன் தங்கி இருந்த 16 வயது சிறுமியை போலீசார் விசாரித்ததில் தங்களது காதலுக்கு இடையூறாக இருந்ததால் தானும், காதலனும் சேர்ந்து சுந்தரியை கொலை செய்தோம் என தெரிவித்தார். இதனையடுத்து அந்த சிறுமியை போலீசார் கைது செய்து காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவனை போலீசார் தேடி வந்த நிலையில் தாண்டிக்குடி அருகே அவனை கைது செய்தனர். போலீசாரிடம் அவன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நான் திண்டுக்கல்லில் வசித்து வருகிறேன். எனக்கும் பண்ணைக்காட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டது. நான் அவரை சந்திப்பதற்காக அடிக்கடி வந்து செல்வேன். இதனை சுந்தரி கண்டித்தார். சம்பவத்தன்று நானும் எனது காதலியும் ஒரே அறையில் தூங்கிக் கொண்டு இருந்தோம்.

இதை பார்த்ததும் என்னை கடுமையாக திட்டி சுந்தரி வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினார். இந்த ஆத்திரத்தில் நானும் என் காதலியும் சேர்ந்து அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம் என்றார். இதனையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Tags:    

Similar News