செய்திகள்
திண்டுக்கல் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது
திண்டுக்கல் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், ஏட்டு வனராஜன் மற்றும் போலீசார் அனுமந்தநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த அனுமந்தநகரை சேர்ந்த பாலமுருகன் (வயது 44) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1,600 பறிமுதல் செய்யப்பட்டது.