என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LOTTERY SALES"

    • 89 லாட்டரி சீட்டு மற்றும் பணம் பறிமுதல்
    • திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியை சேர்ந்தவர் மணி.இவரது மகன் முத்துக்குமரன் (வயது 42).

    இவர் பொன்னேரி கூட்ரோட்டில் உள்ள டீக்கடையில் வைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்று வந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் பிரபு சம்பவ இடத்திற்கு சென்று முத்துக்குமரனிடம் இருந்து 89 லாட்டரி சீட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தார்.

    மேலும் முத்துக்குமரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • செல்போன் பறிமுதல்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த குருவராஜபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வருவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது ஒடுகத்தூர், சல்லாபுரியம்மன் தெருவை சேர்ந்த ராம்குமார் (வயது 37) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிந்தது.

    பின்னர் ராம்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து செல்போன், லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    ஒடுகத்தூர் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கண்ணுபையன் மகன் அய்யனார் (34 ). இவர் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரிகளை வெள்ளைத் தாளில் அச்சிட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார்.
    • தாரமங்கலம் போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த ஒரு செல்போனும், ரூ.500 பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கோழிக்கட்டானூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணுபையன் மகன் அய்யனார் (34 ). இவர் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரிகளை வெள்ளைத் தாளில் அச்சிட்டு அதனை தனது செல்போனில் படம் பிடித்து பொது மக்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி பரிசு விழுந்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி விற்பனை செய்து கொண்டிருந்தவரை தாரமங்கலம் போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த ஒரு செல்போனும், ரூ.500 பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    • பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடை பெறுவதாக பொன்னமராவதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி லாட்டரி விற்பனையில் ஈடுப்பட்ட 2 பேரை கைது செய்தனர்.

    புதுக்கோட்டை :

    பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடை பெறுவதாக பொன்னமராவதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பொன்னமராவதி ஏனமேடு பகுதியை சேர்ந்த சேட் முகமது (வயது56).

    மற்றும் இருசக்கர வாகனத்தில் ஒவ்வொரு ஊராகச் சென்று லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட துவரங்குறிச்சி மருங்காபுரி தாலுகாவை சேர்ந்த பாண்டித்துரை (27) ஆகிய இருவரையும் பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் தலைமையிலான போலீசாரால் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 1500 ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டு மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×