

புதுக்கோட்டை :
பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடை பெறுவதாக பொன்னமராவதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பொன்னமராவதி ஏனமேடு பகுதியை சேர்ந்த சேட் முகமது (வயது56).
மற்றும் இருசக்கர வாகனத்தில் ஒவ்வொரு ஊராகச் சென்று லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட துவரங்குறிச்சி மருங்காபுரி தாலுகாவை சேர்ந்த பாண்டித்துரை (27) ஆகிய இருவரையும் பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் தலைமையிலான போலீசாரால் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 1500 ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டு மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.