லாட்டரி விற்ற வாலிபர் கைது

செல்போன் பறிமுதல் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
லாட்டரி விற்ற வாலிபர் கைது
Published on

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் அடுத்த குருவராஜபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வருவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது ஒடுகத்தூர், சல்லாபுரியம்மன் தெருவை சேர்ந்த ராம்குமார் (வயது 37) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிந்தது.

பின்னர் ராம்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து செல்போன், லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

ஒடுகத்தூர் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com