இந்தியா

டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் மக்களவை தேர்தல் 6-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Published On 2024-05-25 01:37 GMT   |   Update On 2024-05-25 02:10 GMT
  • டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கியது.
  • அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஆறாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று டெல்லி, அரியானா உள்பட ஆறு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வந்தது.

இன்று காலை வாக்குப்பதிவு மையங்களில் அதிகாரிகள் வாக்கு இயந்திரங்களுடன் தயாராக இருந்தனர். இந்த நிலையில் காலை ஏழு மணிக்கு 58 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

Tags:    

Similar News