செய்திகள்
விபத்து பலி

கரூர் அருகே விபத்தில் தொழிலாளி பலி

Published On 2020-03-09 11:16 GMT   |   Update On 2020-03-09 11:16 GMT
கரூர் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்:

அரியலூர் மாவட்டம் கீழ வட்ட புரட்சியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கமலாதாஸ் (வயது 38). இவரது நண்பர் தமிழரசன் (26). இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்கள் கரூருக்கு வேலை வி‌ஷயமாக வந்தவர்கள் கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடச் சென்றனர். அப்போது சாலையை கடக்கும்போது தமிழரசன் மீது வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.

Tags:    

Similar News