செய்திகள்
முக ஸ்டாலின்

அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி முக ஸ்டாலின் ஐகோர்ட்டில் மனு

Published On 2020-02-18 10:31 GMT   |   Update On 2020-02-18 10:31 GMT
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: 

உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசை விமர்சித்ததாகவும், தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் அவதூறு கருத்துக்கள் தெரிவித்ததாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதேபோல, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாகவும் விமர்சித்துப் பேசியது என ஸ்டாலினுக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாக பேசிய ஸ்டாலினை, அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
 
தமிழக அரசு தொடர்ந்த இந்த 3 அவதூறு வழக்குகளில் பிப்ரவரி 24 மற்றும் மார்ச் 4 தேதிகளில் ஆஜராகும்படி தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் பிப்ரவரி 24 ஆம் தேதி ஆஜராவதில் இருந்து விலக்களிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
Tags:    

Similar News