செய்திகள்
தற்கொலை

திருக்கனூரில் தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2020-02-13 10:25 GMT   |   Update On 2020-02-13 10:25 GMT
திருக்கனூரில் தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கனூர்:

திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு ரெட்டியார் வீதியை சேர்ந்தவர் அழகப்பன் (வயது 55). இவர் நெல் அறுவடை எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார்.

ஆனால், இந்த தொழிலுக்கு இவரது மகன் கதிரவன் (27) உதவி செய்யாமல் இருந்து வந்தார். நெல் அறுவடை வேலைக்கு அழகப்பன் அழைக்கும்போதெல்லாம் கதிரவன் செல்லாமல் இருந்து வந்தார். இது தொடர்பாக தந்தை-மகனுக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

அதுபோல் நேற்றும் அவர்களிடையே இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் அழகப்பன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால், அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் இன்று காலை திருக்கனூர் ஏரிக்கரையில் அழகப்பன் இறந்து கிடந்தார். மகனுடன் ஏற்பட்ட தகராறில் அழகப்பன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News