செய்திகள்
அமைச்சர் காமராஜ்

குடியுரிமை சட்ட மசோதாவில் இலங்கை தமிழர்களை அங்கீகரித்திருக்க வேண்டும்- அமைச்சர் காமராஜ் பேட்டி

Published On 2019-12-15 10:25 GMT   |   Update On 2019-12-15 10:25 GMT
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட மசோதாவில் இலங்கை தமிழர்களை அங்கீகரித்திருக்க வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

திருவாரூர்:

திருவாரூர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வினருக்கு வாழ்த்து தெரிவித்த உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசுதான் தேர்தலை நடத்தவில்லை என தி.மு.க திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள். தி.மு.க.வினர் தேர்தலை நிறுத்த வேண்டுமென நினைத்தார்கள் என்பதை தற்போது தெரிந்துவிட்டது. இதற்கு நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகளே சான்று. குடியுரிமை சட்ட மசோதாவில் இலங்கை தமிழர்களை அங்கீகரித்திருக்க வேண்டும் என்று அ.தி.மு.க உறுப்பினர்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கான திருத்தம் இந்த மசோதாவில் தேவை என்று கூறி ஆதரவு தெரிவித்து உள்ளோம். கூட்டணி கட்சி என்ற முறையில் கூட்டணி தர்மத்தை மதிக்க வேண்டும் என்கின்ற நிலையில் இருந்தாலும் இந்த மசோதாவினுடைய நிறை குறைகளை சுட்டிக் காட்டியுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம். மக்களுக்கு எதிரானது எதுவாக இருந்தாலும் நாங்கள் அதனை எதிர்ப்போம்.

தற்போது வெங்காயம் விலை சரிந்துள்ளது. வெங்காய விலை ஏற்றத்தை வைத்து ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்கிவிட முடியுமா என ஸ்டாலின் நினைத்தார்.


வெங்காய விலை வீழ்ச்சியால் பல ஆட்சிகள் விழுந்ததாகவும் பட்டியலிட்டார். ஆனால் ஸ்டாலினுடைய கனவு என்றைக்கும் பலிக்காது என்பது போல், தற்போது வெங்காய விலை தான் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது அ.தி.மு.க அரசின் நடவடிக்கையால் ஏற்பட்ட விலை சரிவு என்பது அனைவருக்கும் தெரியும். 

இவ்வாறு அமைச்சர் இரா.காமராஜ் கூறினார்.

Tags:    

Similar News