செய்திகள்
புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி

பா.ஜனதா தொடர்ந்து அத்துமீறினால் இந்தியாவில் புரட்சி வெடிக்கும்- நாராயணசாமி

Published On 2019-11-24 09:25 GMT   |   Update On 2019-11-24 09:25 GMT
பா.ஜனதா தொடர்ந்து கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க முயன்றால் நாட்டில் புரட்சி வெடிக்கும் என்று புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி கூறியுள்ளார்.
கோவை:

கோவை டி.வி.எஸ். நகர் பகுதியில் புதுச்சேரி முதல்- மந்திரி நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

மகாராஷ்டிரா மாநிலத்தில் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடந்துள்ளது. கவர்னரை கைப்பாவையாக வைத்து கொண்டு கொல்லைப்புற வழியாக பா.ஜனதா ஆட்சியமைத்துள்ளது. மாற்று கட்சி ஆட்சியுள்ள மாநிலங்களில் ஆட்சி கலைப்பு, குதிரைபேரம், எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது உள்ளிட்ட ஜனநாயக விரோத செயல்பாடுகளில் பா.ஜனதா தொடர்ந்து ஈடுபடுகிறது. பண, அதிகார பலத்தை கொண்டு பா.ஜனதா, எதிர்கட்சிகளை ஒடுக்குகிறது.

இந்தியாவில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ஆட்சி என பா.ஜனதாவால் கனவு கூட காண முடியாது. மகாராஷ்டிராவில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க கவர்னர் உத்தரவிடாதது, அவர் பாரபட்சமாக செயல்படுகிறார் என்பதை காட்டுகிறது. மகாராஷ்டிராவில் சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.


எதிர்கட்சிகளை பழிவாங்கும் பா. ஜனதாவின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. பா.ஜனதா தொடர்ந்து கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க முயன்றால் நாட்டில் புரட்சி வெடிக்கும்.

பா. ஜனதா கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. பிரதமரை சந்தித்து நீட் தேர்வில் விலக்கு கேட்க வேண்டும். நீட் தேர்வில் விலக்களிக்க வேண்டுமென பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி நாடகமாட கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News