search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narayanasamy"

    • மத்தியில் பா.ஜனதா ஆட்சி, மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தால் பாலாரும், தேனாறும் ஓடும் என்று வாக்குறுதி கொடுத்தார்.
    • கருத்து வேறுபாடுகளை களைந்து இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக புதுச்சேரி தி.மு.க. நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா ஆட்சியில் புதுச்சேரி மாநில மக்கள் அவதிபடுகின்றனர். சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கஞ்சா பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். நிலம், வீடு அபகரிப்பு நடக்கிறது.

    பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது இரட்டை எஞ்சின் ஆட்சி இருக்க வேண்டும்.

    மத்தியில் பா.ஜனதா ஆட்சி, மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தால் பாலாரும், தேனாறும் ஓடும் என்று வாக்குறுதி கொடுத்தார்.

    ஆனால் அவரால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவில்லை. அவர்களின் தேர்தல் அறிக்கையை எடுத்து பார்த்தால், 5 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை.

    புதுச்சேரி மாநிலத்தில் ரெஸ்டோ பார்களை திறந்து மதுகுடிக்கும் மாநிலமாக மாற்றிவிட்டனர். கஞ்சா மாநிலமாக ஆக்கி விட்டனர். இவர்கள் ஆட்சியில் நீடித்தால் புதுச்சேரியின் வளர்ச்சி மட்டுமின்றி, இளைஞர் சமுதாயம் வீணாகிவிடும். அதற்கு முன்னோட்டமாக இந்த மக்களவை தேர்தல் இருக்கிறது.

    இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இருந்து வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். நாம் தொகுதிகளில் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.

    கருத்து வேறுபாடுகளை களைந்து இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். வேட்பாளரை கண்டுபிடிக்க முடியாமல் 4 மாதங்களாக தடுமாறிக் கொண்டிருக்கின்ற என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி வந்த பிறகு போதைப் பொருட்களான கஞ்சா, அபின், போதை ஸ்டாம்ப் தாராளமாக விற்கப்படுகிறது.
    • குழந்தை உயிரிழப்பானது மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மகிளா காங்கிரஸ் சார்பில் சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்தும், அதற்கு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வலியுறுத்தி புதுச்சேரி அண்ணாசாலை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் அருகே உண்ணாவிரதம் நடந்தது.

    100-க்கும் மேற்பட்ட பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டி பங்கேற்றனர்.

    உண்ணாவிரதத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    புதுச்சேரியில் நடந்த கொடூர சம்பவம் பெண்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியா கூட்டணி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி வந்த பிறகு போதைப் பொருட்களான கஞ்சா, அபின், போதை ஸ்டாம்ப் தாராளமாக விற்கப்படுகிறது. கல்லூரி, பள்ளி, பல்கலைக்கழகம் முன்பாகவும் விற்கப்படுகிறது.

    புதுவை கஞ்சா நகரமாகிவிட்டது. மக்கள் வசிக்கும் பகுதியில் ரெஸ்டோபார்கள் திறக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    முதல்- அமைச்சரும், உள்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் செய்யவில்லை. அதைத் தொடர்ந்தே இச்சம்பவம் நடந்துள்ளது. குழந்தை உயிரிழப்பானது மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

    குழந்தைகளை பள்ளி, கல்லூரிக்கு எப்படி அனுப்புவது? யார் பாதுகாப்பு என பெற்றோர்கள் பயத்தில் உள்ளனர்.

    பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் அதுபோல் நடக்கவில்லை. பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் இதேநிலைதான் உள்ளது.

    குஜராத்தில் ஏராளமான பெண்கள் காணாமல் போயுள்ளனர். பெண்களை துச்சமாக மதிக்கும் பா.ஜனதா, பெண்களுக்கு பாதுகாப்பு தராத ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும்.

    சிறுமி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றத்தின் பின்னணியில் யார் இருக்கிறார் என தெரியவில்லை.

    புதுவை அரசு வழக்கை பூசி மெழுக பார்க்கிறது. அத்துடன் கஞ்சா விநியோகம், எங்கிருந்து வருகிறது. யார் விநியோகம் செய்கிறாகள். எந்த அரசியல்வாதி பின்னணி, பல மாநிலங்களில் சேர்ந்து வருவதால் சி.பி.ஐ. விசாரணை வைத்தால் தான் இவ்வழக்கை முழு ரூபத்தை காணமுடியும். நடவடிக்கை எடுக்க முடியும்.

    சிறுபான்மையினரை பாதிக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சி குடியுரிமை சட்டத்தை எதிர்க்கிறோம். புதுச்சேரியில் அமல்படுத்த முயற்சித்தால் எதிர்ப்போம்.

    புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து நிற்க யாருமில்லா நிலை பா.ஜனதாவில் உருவாகியுள்ளது. காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது. காங்கிரஸ் வேட்பாளரை கட்சித் தலைமை அறிவிக்கும் என்று கூறினார்.

    • கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தலைமை தாங்கி போட்டியிட்ட காங்கிரஸ் 2 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
    • வைத்திலிங்கம் புகைப்படத்துடன் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு நகர பகுதியில் காங்கிரசார் சுவரொட்டி ஒட்டி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதியடைந்துள்ளது.

    கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற அளவிலான தொகுதிகளை பெற காங்கிரஸ் கடும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதிலும், புதுவை தொகுதியை பெற தனி கவனம் செலுத்தினர்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தலைமை தாங்கி போட்டியிட்ட காங்கிரஸ் 2 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேநேரத்தில் தி.மு.க. 6 தொகுதியில் வெற்றிபெற்று எதிர்கட்சி அந்தஸ்தையும் பெற்றது.

    இதன் மூலம் புதுச்சேரியில் இந்தியா கூட்டணியில் பெரிய கட்சியாக தி.மு.க. கருதுகிறது. இதனால் பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என கட்சி தலைமையை வலியுறுத்தி வந்தது.

    அதே நேரத்தில் காங்கிரசார் புதுச்சேரியை தங்களின் கோட்டை என நிரூபிக்க பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இதனால் புதுச்சேரி தொகுதியை பெறுவதில் தி.மு.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

    சிட்டிங் தொகுதி என்ற முறையில் புதுச்சேரி தொகுதியை காங்கிரசுக்கு தி.மு.க. தலைமை ஒதுக்கியுள்ளது.

    புதுச்சேரி தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ள வைத்திலிங்கமே மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட உள்ளார். காங்கிரசில் வைத்திலிங்கம் எம்.பி. தவிர முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியும் சீட் கேட்டு வருகிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வேட்பாளர் யார்? என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    ஆனால் சிட்டிங் எம்.பி. என்ற முறையில் கூடுதலான வாய்ப்புகளை வைத்திலிங்கமே பெற்றுள்ளார். இதனிடையே வைத்திலிங்கம் புகைப்படத்துடன் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு நகர பகுதியில் காங்கிரசார் சுவரொட்டி ஒட்டி வருகின்றனர்.

    கிராமப்புறங்களில் கடந்த 10 ஆண்டுக்கு முன்புள்ள விலைவாசியையும், தற்போதுள்ள விலைவாசியையும் ஒப்பிட்டு காங்கிரசுக்கு வாக்களிப்பீர் என கேட்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. பல இடங்களில் கை சின்னத்தை வரைந்து பிரசாரத்தையும் தொடங்கியுள்ளனர்.

    • 2024-25-ம் நிதியாண்டிற்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது.
    • மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    ஆனால் புதுச்சேரி சட்டசபையில் 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. நடப்பு நிதியாண்டு மார்ச் மாதம் 9-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கிய சட்டசபையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபையை கூட்ட வேண்டும் என்ற விதிமுறை காரணமாக கடந்த செப்டம்பர் 9-ந்தேதி மீண்டும் சட்டசபை கூட்டப்பட்டது. ஒருநாள் நடந்த கூட்டம் அலுவல்கள் முடிந்து ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் குறுக்கிடுவதால் மார்ச் மாதம் மீண்டும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. அதேநேரத்தில் அரசின் நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் பெற வருகிற 22-ந் தேதி காலை 9.45 மணிக்கு புதுவை சட்டசபை கூடுகிறது.

    அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அனேகமாக 4 மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

    சட்டசபை கூடும் தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    2024-25-ம் நிதியாண்டுக்கான மானிய திட்ட முன்வரைவு பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டு கருத்துகை செய்யப்படும். பேரவை முன்வைக்கப்பட வேண்டிய ஏடுகள் இருந்தால், அவற்றை சட்டசபையில் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்படும்.

    2024-25-ம் நிதியாண்டிற்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் 75 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த நிதியாண்டில் முழுமையாக நிதி செலவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜனதா தலைவர் செல்வகணபதி எம்.பி. கடும் தாக்கு
    • முதல்-அமைச்சர் நாராயணசாமி பா.ஜனதா அரசுதான் அதற்கு அனுமதி கொடுத்தது என கூறியிருப்பது முழு பொய் அதிலும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

    பா.ஜனதா அரசுதான் காலாப்பட்டு மருந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுமதி கொடுத்தது என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியிருக்கிறார்.

    காலாப்பட்டு தொழிற்சாலையில் இதற்கு முன்பும் காங்கிரஸ் ஆட்சி காலங்களில் விபத்துகள் நடந்துள்ளன. சுற்று சூழல் மாசு கெடுவதாக சொல்லி அந்தப் பகுதி மக்கள் அப்போதும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி உள்ளனர்.

    காலாப்பட்டு தொழிற்சாலை 1986-ல் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் முதல்-அமைச்சராக இருந்த பரூக் மரைக்காயர் காலத்தி ல்தான் தொடங்கப்பட்டது.

    ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் கோடிக்கு மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் என்பதால், காங்கிரஸ் தொழிற்சங்கவாதிகள் இந்த ஒரு தொழிற்சாலையை மட்டும். பொன் முட்டையிடும் வாத்து போல பார்த்து வந்தனர்.

    பரூக் மரைக்காயர் காலாப்பட்டு தொகுதி மக்களால் தேர்வு செய்யப்பட்டவர். அவர் முதல்வராகவும் இருந்ததால், எளிதாக இந்த தொழிற்சாலை அந்த காலத்தில் புதுச்சேரிக்குள் நுழைந்துவிட்டது.

    நிலைமை இப்படி இருக்க வாய்புளித்ததோ வார்த்தை புளித்ததோ என்று தெரியாமல் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பா.ஜனதா அரசுதான் அதற்கு அனுமதி கொடுத்தது என கூறியிருப்பது முழு பொய் அதிலும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

    நாங்கள் சொல்வது தவறு என நாராயணசாமி கூற விரும்பினால், இந்திய கம்பனி சட்டங்களின் இணையதளத்திற்கு சென்று அந்த தொழிற்சாலை எப்படி உருவானது, அது புதுச்சேரியில் எப்படி கால் பதித்தது என்ற வரலாறு களை தெரிந்துகொள்ளட்டும்.

    நாட்டை தலைநிமிரச் செய்த பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி செய்யும் பா.ஜனதா கட்சியின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்கு நாராயண சாமிக்கு வேறு காரணங்கள் கிடைக்க வில்லை.

    அதனால் இந்த சம்பவத்தை அரசியலாக்கி வரும் எம்.பி. தேர்தலில் ஆதாயம் தேட பார்க்கிறார்.

    அவர் எவ்வாறு முயற்சித்தாலும் பா.ஜ.க.வின் புகழையோ, அது நாட்டு மக்களுடன் கொண்டுள்ள தொடர்பையோ ஒரு நூலிழை கூட பிரித்துவிட முடியாது. காலாப்பட்டு தொழிற்சாலை விபத்து சம்பந்தமாக உயர்மட்ட விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாதிக்கப்ப ட்டவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி அரசும், கவர்னரும் இந்த விஷயத்தில் மிக விரைவான நடவடிக்கை களை எடுத்து வருகின்றனர்.

    தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், குட்டையை குழப்பி அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என நாராயணசாமியை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாராயணசாமி தாக்கு
    • விவசாயிகள் அனைத்து சலுகைகளையும் மோடி அரசு பறித்துள்ளது அத்தியாசிய பொருட்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது.

    புதுச்சேரி:

    திருபுவனை வட்டார காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் மதகடிப்பட்டில் நடந்தது.

    கூட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஜெயக்குமார், துளசிங்க பெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில பொதுசெயலாளர் தனுசு முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-

    மத்தியில் மோடி ஆட்சி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வந்தால் மோதல் இருக்காது. நல்லது நடக்கும் என மக்கள் வாக்களித்தனர் ஆனால் தற்போது அண்ணன், தங்கை சண்டை நடந்து வருகிறது. இது பற்றி யாராவது கேட்டால் அண்ணனுடன் எந்த சண்டையும் இல்லை என கவர்னர் தமிழிசை கூறுகிறார்

    அதே நேரத்தில் ரங்கசாமி கோப்பு காலதாமதமாகிறது, கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்படும் கோப்பு திரும்புவதில்லை, அதிகாரிகள் வேலை செய்வதில்லை என்று கூறுகிறார்.மோடி வந்தால் எல்லாம் கிடைத்து விடும் என்று சொன்னார்கள்

    ஆனால் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை அமைச்சர்கள், எம்.எல்.ஏ. க்கள் ஊரை சுற்றி வருகிறார்கள். தவறு செய்த அதிகாரியை மாற்றி விட்டார்கள் ஆனால் அவர்கள் குற்றவாளி என அரசாங்கம் அறிவித்ததா.?

    தமிழகத்தின் மகளிர் இலவச பேருந்து, குடும்பத் தலைவருக்கு ஆயிரம் வழங்கும் திட்டம் புதுவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் செயல்படுத்தப்படவில்லை. கியாஸ் மானிய திட்டமும் அது போல் தான் இருக்கிறது. இதற்கு ரங்கசாமியும் மோடியும் தான் காரணம்

    பா.ஜனதா வுக்கு ரங்கசாமி துணை ரங்கசாமிக்கு அன்பழகன் துணை என்று இருக்கிறார்கள். என்ஆர். காங்கிரஸ்-அதிமுக கூட்டணி இதுவரை உடையவில்லை. நீங்கள் இவர்களில் யாருக்கு வாக்களித்தாலும் அது மோடிக்கு தான் கிடைக்கும்

    இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி பேசியதாவது:-

    மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இரட்டிப்பு மானியம் தருவதாக விவசாயிகளிடம் வாக்கு கேட்டார். ஆனால் தற்போது உரத்திற்கான மானியத்தை நிறுத்தி விட்டார்கள். விவசாயிகள் அனைத்து சலுகைகளையும் மோடி அரசு பறித்துள்ளது அத்தியாசிய பொருட்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது.

    அதே நேரத்தில் அதானி போன்றவர்களுக்கு கடன் என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் வாரி கொடுக்கப்படுகிறது.

    அமலாக்கத்துறை சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை பலவீனமாக பிரதமர் மோடி நினைக்கிறார். ஆனால் மோடியை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் கங்கணம் கட்டிக்கொண்டு காத்திருக்கிறார்கள்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து விட்டார். புதுவை அமைச்சர்கள் வெளிநாடுகளில் லஞ்சப் பணத்தை பதுக்குகிறார்கள். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை. நாம் உருவாக்கியவர்கள் நம்மை முதுகில் குத்தி விட்டு செல்கிறார்கள்.

    அதில் முதலாமவர் ரங்கசாமி, 2-வது நமச்சிவாயம் 3-வது அங்காளன். ரங்கசாமி கோரிமேட்டை தாண்ட மாட்டார். ரங்கசாமியின் ஆட்சி குறை பிரசவம் சீக்கிரம் முடிந்துவிடும்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    கூட்டத்தில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன், பி.சி.சி. உறுப்பினர் நடராஜன்,நிர்வாகிகள் கோதண்டபாணி, வேணு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநில கவர்னர்களுக்கு தனிப்பட்ட எந்த அதிகாரமும் இல்லை
    • கவர்னராக கிரண்பேடி காங்கிரஸ் அரசுக்கு கொடுத்த தொல்லையை தற்போது தமிழக அரசுக்கு கவர்னர் ரவி கொடுத்து வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய பா.ஜனதா அரசு திட்டமிட்டு எதிர்கட்சி தலைவர்களை பழிவாங்குகிறது. அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதும், வருமான வரித்துறை, சி.பி.ஐ, அமலாக்கத்துறையை வைத்து மிரட்டுவதும் தொடர்கிறது.

    தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பொய் வழக்கு போட்டனர். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை விசாரித்து 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

    டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த 2 அமைச்சர்கள், ஒரு எம்.பி. மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர்கள் மீதும் 12 ஆண்டுக்கு முன் நடந்ததாகக்கூறி ராஜஸ்தான் முதல்-மந்திரி மகன் மீது அமலாக்கத்துறை விசாரணை நடக்கிறது.

    ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் வீட்டில் சோதனை நடக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு எதிர்கட்சி தலைவர்கள் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

    உச்சகட்டமாக புதுடெல்லி முதல்-மந்திரி அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

    ஆனால் ஊழலில் சிக்கியுள்ள பா.ஜனதா முதல்-அமைச்சராக இருந்த பொம்மை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    வியாபம் ஊழலில் சிக்கிய மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அசாம் முதல்-மந்திரி மீது சி.பி.ஐ. வழக்கு தாக்கல் செய்தது.

    அவர் பா.ஜனதாவில் சேர்ந்ததும் வழக்கு மூடி மறைக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் 750 சி.பி.ஐ. வழக்குகள்தான் இருந்தது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் 5 ஆயிரத்து 900-க்கும் மேற்பட்ட வழக்குகள் எதிர்கட்சி தலைவர்கள் மீது போடப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் முடிவுக்கு வந்தது 6 வழக்குகள் மட்டும்தான்.

    இதன்மூலம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெறலாம் என பிரதமர் மோடி நினைக்கிறார். அவரின் வேஷம் கலைந்துவிட்டது. பிரதமர் மோடி, அமித்ஷா எப்படி வழக்கு போட்டார்களா?

    அவை அனைத்தும் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின் அம்பலத்துக்கு வருகிற 2024-ல் இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அப்போது மோடி ஆட்சியில் நடந்த ஊழல்கள் பட்டியலிடப்பட்டு அதானி, பிரதமர் மோடி, புதுவையில் உள்ள அமைச்சர்கள் வரை விசாரணை நடத்தப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள்.

    தமிழக கவர்னர் ரவி அதிகார துஷ்பிரயோகம் செய்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வேலையை செய்து வருகிறார்.

    மாநில கவர்னர்களுக்கு தனிப்பட்ட எந்த அதிகாரமும் இல்லை. அமைச்சரவை எடுக்கும் முடிவை ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    கவர்னராக கிரண்பேடி காங்கிரஸ் அரசுக்கு கொடுத்த தொல்லையை தற்போது தமிழக அரசுக்கு கவர்னர் ரவி கொடுத்து வருகிறார்.

    தமிழக அரசு அனுப்பிய 12 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டுள்ளார். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும், ஜனநாயக மரபுக்கும் எதிரானது. தமிழக தி.மு.க. கூட்டணி ஆட்சியை பலவீனப்படுத்தும் வகையில் செயல்படும் கவர்னரின் செயல்பாடு மக்களிடம் எடுபடாது.

    கவர்னர் ரவியின் செயல்பாடு தமிழ்நாடு வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறது. இதனால் பாதிக்கப்போவது பா.ஜனதாவும், கவர்னர் ரவியும்தான். இண்டியா கூட்டணிக்கோ, தமிழக முதலமைச்சருக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

    2024 தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகம், புதுவை உட்பட 40 தொகுதியிலும் அமோக வெற்றி பெறுவோம்.

    மோடிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தால் கவர்னர் ரவியை திரும்பப்பெற வேண்டும். தமிழக அரசுக்கு தொல்லை கொடுக்கவே கவர்னர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நாராயணசாமி கூறுவதுபோல அரசியலமைப்பு சட்டத்தையோ, ரகசிய காப்பு பிரமாணத்தையோ நான் மீறவும் இல்லை.
    • அமைச்சராக இருந்த சந்திரபிரியங்காவுக்கு முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எப்போதும் கவர்னரோடு சண்டைபோடவே விரும்புகிறார்.

    ஏற்கனவே இருந்த கவர்னரோடும் சண்டையிட்டுள்ளார். இப்போது என்னோடும் சண்டை போடுகிறார். அவருக்கு கவர்னர் என்றாலே பிடிக்கவில்லை.

    அவர் முதலமைச்சராக இருந்தபோது தவறாக மொழி பெயர்த்தது போல நான் எதுவும் செய்யவில்லை. அவர் கூறுவது போல அரசியலமைப்பு சட்டத்தையோ, ரகசிய காப்பு பிரமாணத்தையோ நான் மீறவும் இல்லை.

    அவர்கள் பெண்களுக்கு எவ்வளவு வாய்ப்பு தந்தார்கள்? அவர் ஆட்சிக்காலத்தில் பட்டியலின பெண் எம்.எல்.ஏ.வாக இருந்தும் அமைச்சராக வாய்ப்பு தரவில்லை. இந்த விஷயத்தில் அவர் பேசுவதற்கே உரிமை இல்லை.

    அமைச்சராக இருந்த சந்திரபிரியங்காவுக்கு முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் கூட இதுபோல முக்கிய துறைகள் பெண் அமைச்சர்களுக்கு வழங்கப்படவில்லை. இதைப்பற்றி தெரியாமல் கனிமொழி எம்.பி. பேசி வருகிறார்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 ஆண்டும் மாநில அந்தஸ்து பெறுவோம் என கூறியே முதல்- அமைச்சர் தனது ஆட்சியை நடத்துவார்.
    • மாநில அந்தஸ்து என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி ரங்கசாமி ஆட்சி நடத்துகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவோம் என என்.ஆர்.காங்கிரஸ் மக்களிடம் தெரிவித்து தேர்தலை சந்தித்தது தேர்தல் நேரத்தில் புதுவைக்கு வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவோம் என கூறியிருந்தார்.

    ஆனால் இவை இரண்டுமே நடைபெறவில்லை. 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுவரை முதல்-அமைச்சர்கள் மாநாட்டிலும், பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்கும்போதும், தொடர்ந்து புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என நான் வலியுறுத்தினேன்.

    சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பினோம். மத்திய உள்துறை அமைச்சகம் இந்த கோப்பை கிடப்பில் போட்டது.

    மாநில அந்தஸ்து கொடுத்தால், காங்கிரஸ் அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்பதற்காகவும், களங்கம் விளைவிக்கும் எண்ணத்தோடும் தீர்மானத்தை ஏற்கவில்லை.

    இப்போது மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான ஆட்சிதானே நடக்கிறது. இவர்களால் ஏன் மாநில அந்தஸ்து பெற முடியவில்லை. இதிலிருந்து தெள்ளத்தெளிவாக பிரதமர் மோடி, புதுவை மாநில மக்களை பழிவாங்குகிறார் என தெரிகிறது. பா.ஜனதா புதுவை மக்களை உதாசீனப்படுத்துகிறது.

    மாநில அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய அரசு கைவிரித்துள்ள நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வர தயாரா? பா.ஜனதாவின் அடிமை ஆட்சியை முதல்-அமைச்சர் ரங்கசாமி நடத்துகிறார்.

    5 ஆண்டும் மாநில அந்தஸ்து பெறுவோம் என கூறியே முதல்- அமைச்சர் தனது ஆட்சியை நடத்துவார். அவரால் மாநில அந்தஸ்து பெற முடியாது. மாநில அந்தஸ்து என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி ரங்கசாமி ஆட்சி நடத்துகிறார்.

    இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.

    • வீடியோ ஆதாரம் வெளியிட்டு நாராயணசாமி புகார்
    • நில அபகரிப்பு கூட்டம் அரசியல்வாதிகளின் துணையோடு இந்த செயல்களில் ஈடுபட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ராகுல்காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்த கணக்கெடுப்பு நடத்தினால் மேல்சாதி மக்களுக்கு செல்லும் சலுகைகள் தடுக்கப்படும்.

    புதுவையிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சென்டாக்கில் தொடர்ந்து குளறுபடி நடக்கிறது. என்.ஆர்.ஐ. இட ஒதுக்கீட்டில் விதிமுறையை மாற்றி இடங்களை அபகரிக்க முயற்சிக்கின்ற னர். இதற்கு துறை செயலாளர் ஒத்துக் கொள்ளாததால் இந்த முடிவை கைவிட்டுள்ளனர்.

    பல் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர் சுரேந்தருக்கு 2-வது கட்ட கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ். சீட் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு சீட் ஒதுக்கவில்லை என்பதால் புகார் தெரிவித்துள்ளார்.

    இதனால் கவுன்சிலிங் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுவை அரசு உயர்த்திய மின் கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும்.

    புதுவையில் போலி பத்தி ரங்கள் தயாரிப்பது, நிலங்களை அபகரிப்பது, தனியார் சொத்துக்களை வேறு நபருக்கு பட்டா போடுவது, கோவில் நிலங்களை அபகரிப்பது, அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பத்திரப்பதிவு செய்வது என பத்திரப்பதி வுத்துறை தொடர் ஊழலில் ஈடுபட்டுள்ளது.

    சி.பி.ஐ. காரைக்காலில் சார்பதிவாளர் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டார். அவர் வாக்குமூலத்தில் யாருக்கு லஞ்சம் செல்கிறது என தெரிவித்துள்ளார்.

    புதுவை காமாட்சியம்மன் கோவில் நில வழக்கில் சார்பதிவாளர், பத்திரப்பதி வுத்துறை செயலாளர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதுதொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு, நிலத்தை மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளது. இதை வலி யுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

    புதுவையில பல போலி பத்திரங்கள் தயாரிக்கப்படு கிறது. 32 போலி பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு, ஏற்கனவே பதிந்துள்ள பத்திரங்களை எடுத்துவிட்டு, போலி பத்திரத்தை வைத்து ரூ.பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.

    பதிவுத்துறையில் இன்டெக்ஸ் புத்தகம், கைரேகை புத்தகம் இருக்கும். இன்டெக்ஸ் புத்தகத்தில் பக்கத்தை எடுத்து விட்டு, போலி பத்திரம் செய்தவர்க ளின் பட்டியலை இணைக்கின்றனர். இதற்கு அதிகாரிகள், ஊழியர்கள் துணையாக உள்ளனர். 29 பத்திரம் உழவர்கரை, 3 பத்திரம் பாகூர் சார்பதி வாளர் அலுவலகத்தில் பதி யப்பட்டுள்ளது. பதிவுத்துறைக்கு தொடர்பி ல்லாதவர்கள் உள்ளே நுழைந்து அதிகாரிகள் ஒத்துழைப்போடு பத்தி ரங்களை மாற்றியுள்ளனர்.

    ஒரு மாதம் முன்பு இதை மாற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளது. இதுகுறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தியுள்ளார். இதில் அரசியல்வாதிகளின் பின்னணி உள்ளது. ஒரு பத்திரத்துக்கு ஒரு எண்தான் தருவார்கள். ஆனால் 2 பத்திரத்துக்கு ஒரே எண் அளிக்கப்பட்டுள்ளது. வில்லியனூரில் சார்பதி வாளர் கார்த்திகேயன் என்பவர் போலி பத்திரம் பதியமாட்டேன் என கூறியதால் அவரை ஒரு கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார்.

    தற்போது திருக்கனூர் சார்பதிவாளர் பாஸ்கர், வில்லியனூருக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு பத்திரம் பதியப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக பத்திரப்பதிவு ஊழலுக்கு என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சிதான் காரணம். பொதுமக்களின் பத்திரத்திற்கு உத்திரவாதம் இல்லாத நிலை உள்ளது. யார் சொத்தை வேண்டு மானாலும், யாருக்கு வேண்டுமானாலும் எழுதி கொடுக்கும் நிலை உள்ளது.

    பத்திரப்பதிவுத்துறையில் இமாலய ஊழல் நடக்கிறது. நில அபகரிப்பு கூட்டம் அரசியல்வாதிகளின் துணையோடு இந்த செயல்களில் ஈடுபட்டுள்ளது. இந்த பத்திரப்பதிவுக்கு முதல்-அமைச்சரும் உடந்தையாக உள்ளார். புதுவையில் உள்ள மக்களின் சொத்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாத என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. போலி உயில், பத்திரம் தொடர்பாக சி.பி.ஐ. விசா ரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் ஒரு வீடியோ ஆதாரம் ஒன்றையும் வெளியிட்டார். அதில் ஒருவர் தரையில் அமர்ந்து இன்டெக்ஸ் புத்தகத்தில் ஆவணங்களை மாற்றுவதுபோல காட்சி பதிவாயிருந்தது.

    • நாராயணசாமி வலியுறுத்தல்
    • போக்குவரத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. போக்குவரத்து போலீசார் எந்த சிக்னலிலும் சீரமைப்பு பணியில் ஈடுபடவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    புதுவையில் 2½ ஆண்டாக முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆட்சிக்கு வந்தபின் பேனர் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள்,

    எம்.எல்.ஏ.க்கள் பிறந்தநாள் விழாக்களில் புதுவையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அரசின் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்படுகிறது.

    புதுவையில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ளது. இதை அமல்படுத்த வேண்டிய கலெக்டர், காவல்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். ஐகோர்ட்டில் ஏற்கனவே பேனர் தடை சட்டத்தை அமல்படுத்த தீர்ப்புள்ளது. மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவு புதுவையில் காற்றில் பறக்கிறது.

    முதல்-அமைச்சரே பேனர் தடை சட்டத்தை மதிப்பதில்லை. காவல்துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழாவுக்காக புதுவை முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. சமூக ஆர்வலர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டம் நடத்தியும் எடுக்கவில்லை. பேனர்களால் விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துகளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த 2 உயிர் பலிக்கு முதல்-அமைச்சர், அமைச்சர் நமச்சிவாயம் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர், அமைச்சர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். நைனார்மண்டபத்தில் பேனரை கிழித்தார்கள் என 2 சிறுவர்கள் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.

    பேனரை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. அமைச்சர் பிறந்தநாள் விழா முடிந்த வுடன் கலெக்டர் பேனர்களை அகற்ற அறிவிப்பு வெளியிடுகிறார்.

    கலெக்டர் என்ன ஜப்பானில் இருந்தாரா? அவர் புதுவையில் பேனர்களை பார்க்க வில்லையா? எந்த அரசிய ல்கட்சியாக இருந்தாலும் பேனர் வைப்பது தவறு. பேனர் வைத்தால் நடவடி க்கை எடுக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட, அனுமதியளித்த இடங்களை தவிர மற்ற இடங்களில் யார் பேனர் வைத்தாலும் அகற்றப்பட வேண்டும்.

    மாவட்ட கலெக்டர், நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் மீது உள்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சட்டத்தை மதிக்கும் ஆட்சியாக இருந்தால் பதவியிலிருந்து வெளியேற வேண்டும். புதுவை மக்கள் குமுறி வருகின்றனர்.

    புதுவையில் தற்போதுள்ள அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த எந்த முக்கியத்துவமும் அளிப்பதி ல்லை. எதிர்கட்சிகள் கேள்விகேட்டால் பதில் சொல்வதில்லை. சுய விளம்பரம் செய்வதில்தான் ஆட்சியாளர்கள் விருப்பமாக உள்ளனர். துன்புறுத்தாமல் இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

    புதுவையில் கஞ்சா நடமாட்டம் அதிகரித்துள்ளது. போக்குவரத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. போக்குவரத்து போலீசார் எந்த சிக்னலிலும் சீரமைப்பு பணியில் ஈடுபடவில்லை. போலீசார் கட்ட பஞ்சாயத்து செய்யும் வேலையில் உள்ளனர்.

    காவல்துறையில் எந்த புகாரையும் பதிவு செய்வதில்லை. புதுவை மாநில காவல்துறை தரம்கெட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான இடத்தை பிடித்து காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி வரும்.
    • நாம் கருத்து வேறுபாடுகளை மறந்து வருகிற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடவேண்டும்.

    புதுச்சேரி:

    ராகுல்காந்தி எம்.பி. பாதயாத்திரை மேற்கொண்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் புதுவை காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி நடந்தது.

    புதுவை பிள்ளைத்தோட்டம் பெரியார் சிலை அருகே தொடங்கிய இந்த ஊர்வலத்துக்கு காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார்.

    இந்த ஊர்வலம் காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக வந்து ஆம்பூர் சாலை அருகே நிறைவடைந்தது.

    ஊர்வலத்தின் முடிவில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான இடத்தை பிடித்து காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி வரும். அப்போது ராகுல்காந்தி பிரதமராவார்.

    இந்தியா கூட்டணியை பார்த்து பிரதமர் மோடிக்கு பயம் வந்து விட்டது. சோனியாகாந்தி 17 கேள்விகள் கேட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பினால், அதற்கு பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலத் ஜோஷி பதில் சொல்லுகிறார்.

    புதுவையில் கவர்னரும், முதலமைச்சரும் சேர்ந்து கியாஸ் சிலிண்டர் மானிய திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். ஆனால் மானியம் இன்னும் வரவில்லை. ஏனெனில் அந்த திட்டத்துக்கு ரூ.120 கோடி தேவை. ஆனால் அதற்கு நிதி ஒதுக்கவில்லை. நாம் கருத்து வேறுபாடுகளை மறந்து வருகிற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடவேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    ×