செய்திகள்
பெண் பிணம்

சிங்காநல்லூரில் அழுகிய நிலையில் பெண் பிணம் மீட்பு- போலீசார் விசாரணை

Published On 2019-10-18 11:51 GMT   |   Update On 2019-10-18 11:51 GMT
கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிங்காநல்லூர்:

கோவை சிங்காநல்லூர் ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி கற்பகம்(வயது 84). இவர்களுக்கு 3 மகன், 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் பழனியப்பன் இறந்து விட்டார். இதையடுத்து கற்பகம் மட்டும் தனியாக வசித்து வந்தார். கற்பகத்தை சாய் பாபா காலனியில் வசித்து வரும் அவரது மகனான சுந்தர்ராஜ் என்பவர் அடிக்கடி வந்து பார்த்து செல்வார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது தாயை பார்ப்பதற்காக சுந்தராஜ் வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டு கிடந்தது. அவர் கதவை தட்டிப்பார்த்தும் வெகு நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் அவர் ஜன்னல் கதவை திறந்து பார்த்தார். அப்போது வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ராமநாதபுரம் போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அவர் கட்டிலில் இறந்த நிலையில் கிடந்தார். மேலும் அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News