தமிழ்நாடு

கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம்: ரெயில்வே விளக்கம்

Published On 2024-05-10 07:39 GMT   |   Update On 2024-05-10 07:39 GMT
  • அபாய சங்கிலியை இழுத்தும் ரெயில் நிற்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
  • விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ரெயில்வே துறை அறிவித்து இருந்தது.

சென்னை:

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் இருந்து கொல்லம் ரெயிலில் கர்ப்பிணி பெண் கஸ்தூரி தவறி விழுந்து உயிரிழந்தார். விருத்தாசலம் அருகே ரெயில் சென்றபோது அபாய சங்கிலியை இழுத்தும் நிற்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

பக்கத்து பெட்டியில் இருந்த அபாய சங்கலியை இழுத்து ரெயிலை நிறுத்தியதாகவும் அவர்கள் கூறி இருந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ரெயில்வே துறை அறிவித்து இருந்தது.

இந்நிலையில் ஓடும் ரெயிலில் இருந்து கர்ப்பிணி பெண் தவறி விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் ரெயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்,

ரெயிலில் எந்த ஒரு தொழில்நுட்ப கோளாறும் கண்டறியப்படவில்லை என்றும் ரெயில்வே விசாரணையில் அபாய சங்கிலி சரியாக இயங்கியதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மொத்தம் உள்ள 17 பெட்டிகளிலும் அபாய சங்கிலி முழுமையாக இயங்கியதாக தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News