தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி
- தி.மு.க. கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது.
- டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன், கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையை தொடங்கியது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்து வருகிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆளும் தி.மு.க. கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.
இதில், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவும், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தையை தொடங்கியது.
இந்நிலையில் கூடுதல் தொகுதி விவகாரத்தில் இருதரப்பும் விடாபிடியாக இருப்பதால் இழுபறி என தகவல்வெளியாகி உள்ளது.
39 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துவதாகவும், தி.மு.க. தரப்பில் 22 சீட்கள் மட்டுமே தர முடியும் என உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.