என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அழுகிய நிலையில் பெண் பிணம்"
- தோழியின் வீட்டிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
- சாலையோரம் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள அன்பூண்டி சர்வீஸ் சாலையை ஒட்டி உள்ள முட்புதரில் நேற்று இளம்பெண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அதில் பிணமாக கிடந்த இளம் பெண் கொணவட்டம் கீழாண்டை தெருவை சேர்ந்த சுகுமாரன் என்பவரது மகள் சுமித்திரா (வயது 28) என்பது தெரியவந்தது. வீட்டு வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.
மேலும் திருமணம் செய்யாமல் இருந்தார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சுமித்ராவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு தோழிகள் வீடுகளுக்குச் சென்று விடுவார்.இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்து டிபன் பாக்சில் உணவை எடுத்துக்கொண்டு தோழியின் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.
இந்த நிலையில் சுமித்திரா பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை.மேலும் அவர் பிணமாக கிடந்த இடத்தின் அருகே அவரது செல்போன் டிபன் பாக்ஸ் அப்படியே கிடந்தது. இதனால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தான் இந்த சம்பவத்தில் உண்மையான தகவல் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்