search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் பிணம்"

    • சேலம் செவ்வாய்ப்பேட்டை மீன்மார்க்கெட் அருகே திருமணிமுத்தாற்றில் 60 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதப்பதாக செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. மூதாட்டி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை மீன்மார்க்கெட் அருகே திருமணிமுத்தாற்றில் 60 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதப்பதாக செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு உடலை மீட்டனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை.

    மூதாட்டி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாமரைச்செல்வி (வயது 53). இவர் இன்று காலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தார்.
    • இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் குகை ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது 53). இவர் இன்று காலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று தாமரைச் செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தண்ணீர் தொட்டியில் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் ஹிமாவுடன் தங்கி இருந்த நண்பர்களை, ஜோலார்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    ஜோலார்பேட்டை:

    ஆந்திர மாநிலம் திருப்பதி எம்.ஆர். பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி ஹிமா (வயது 23), நடன கலைஞர். தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் ஹிமா தனது நண்பர்களான நடன கலைஞர்களுடன் நேற்று ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்தார். ஏலகிரி மலையில் உள்ள தனியார் விடுதியில் ஹிமா உள்பட 8 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 10 பேர் நேற்று இரவு முழுவதும் தங்கினர்.

    இந்த நிலையில் இன்று காலை ஹிமா விடுதி அறையில், தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனைப் பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் போலீசார் ஹிமாவுடன் தங்கி இருந்த நண்பர்களை, ஜோலார்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூக்கில் பிணமாக தொங்கிய பெண் தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தில் உறவினர்களுக்கும், கருப்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து லலிதா எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே உள்ள சிங்குகாடு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லலிதா (வயது 60). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பரமசிவம், லலிதா இருவரும் கடந்த 6 வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லாமல் பிரிந்து வாழ்ந்து வந்தனர். நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்ற லலிதா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் லலிதாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் ஊர் அருகே குழந்தைவேலு என்பவரது விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றின் கரையில் லலிதாவின் செருப்பு கிடந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தில் உறவினர்களுக்கும், கருப்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசாரும் ஓமலூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி லலிதாவின் உடலை தேடினர். வெகு நேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவில் லிலதா உடலை கண்டுபிடித்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லலிதா எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனலட்சுமி, அன்னலட்சுமி வசித்து வந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.
    • தாய்-மகள் ஒரே நேரத்தில் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம் சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே படந்தால் முத்துராமலிகாபுரம் நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது97). இவர் முதலில் ராமசாமி என்பவரை திருமணம் செய்துள்ளார். இதில் அன்னலட்சுமி (75) என்ற மகள் உள்ளார்.

    ராமசாமி 35 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தனலட்சுமி, முத்துசாமி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் அவருக்கு மாரியப்பன், பாலகிருஷ்ணன் என்ற 2 மகன்கள் உள்ளனர். பாலகிருஷ்ணன் மனைவி பிரிந்து சென்று விட்டதால் அவரது வீட்டில் தனலட்சுமியும், அன்னலட்சுமியும் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று தனலட்சுமி, அன்னலட்சுமி வசித்து வந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் அதே பகுதியில் வசிக்கும் சிவராமச்சந்திரன் என்பவர் சந்தேகம் அடைந்து மாரியப்பனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து மாரியப்பனும், வேலுச்சாமி மகன் சக்தி குமார் என்பவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு தனலட்சுமியும், அன்னலட்சுமியும் பிணமாக கிடப்பது தெரிய வந்தது.

    அவர்கள் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது. எனவே அவர்கள் 2 நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.இது பற்றிய புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமி, அன்னலட்சுமி ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தனலட்சுமி வயது முதிர்வு காரணமாகவும், அன்னலட்சுமி உடல்நலக் குறைவால் இறந்திருக்கலாம் என்றும், அவர்கள் ராணுவத்தில் பணியாற்றி இறந்த தங்களது உறவினர் ராமசாமி என்பவரின் பென்ஷனை பெற்று வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

    தனலட்சுமி, அன்னலட்சுமி வசித்து வந்த வீட்டின் கதவு சாத்தப்பட்டு இருந்ததால் அருகில் வசிப்பவர்கள் அவர்கள் வெளியில் சென்றிருக்கலாம் என நினைத்துள்ளனர். இதனால் தாயும், மகளும் இறந்து 2 நாட்களுக்கு பின்னரே தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் இருந்துள்ளது.

    தாய்-மகள் ஒரே நேரத்தில் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம் சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • யார்? என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் கோட்டை அகழியில் பெண் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் கோட்டை யில் கடந்த வாரம் காதல் ஜோடியிடம் சிலர் அத் துமீறி மிரட்டல் விடுத்து பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இச்சம்ப வம் தொடர்பாக 17 வயது சிறுவன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் வேலூர் கோட்டையில் கண்கா ணிப்பு கேமரா, புறக்கா வல் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேலூர்

    கோட்டை அகழியில் நேற்று காலை 9 மணி யளவில் படகு சவாரி நடைபெறும் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதப்பதாக வேலூர் வடக்கு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீ சாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அகழியில் மிதந்த பெண்ணின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

    போலீசார் பிரேத பரிசோதனைக் காக உடலை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? சமீபத்தில் காணாமல் போன பெண்களின் விவரங்கள் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல் கிடந்தது கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.
    • கொன்று விட்டார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரியை அடுத்துள்ள கோட்டப்பட்டி அருகே பொய்யப்பட்டி வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது.

    அப்பகுதி வழியாக சென்ற வர்கள் வனப்பகுதிக்குள் சென்று பார்த்தபோது அங்கு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல் கிடந்தது கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.

    இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து கிடந்த பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும். அவரது உடல் கிடந்த இடத்தருகே துணிகள் கிடந்தன.

    இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இந்த காட்டு பகுதிக்கு எதற்காக வந்தார்? யாராவது அவரை கற்பழித்து கொன்று விட்டார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    • மதிக்கத்தக்க பெண் உடலில் உடையின்றி உப்பிய நிலையில் நிர்வாணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • காவல்நிலையத்திற்கு பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அகில இந்திய வானொலி நிலையம் அருகே, தியாகி திருநாவுக்கரசு நகரை ஒட்டி, வாய்க்கல் ஒன்று உள்ளது. வாய்க்காலை ஒட்டிய வயல்வெளிகளில், அப்பகுதி சிறுவர்கள் நத்தை பிடிப்பது வழக்கம். வழக்கம் போல், சிறுவர்கள் சிலர், அப்பகுதி யில் நத்தை பிடித்து கொண்டிருந்த போது, வாய்க்கால் நீரில், 40 லிருந்து 45 வய து மதிக்கத்தக்க பெண், உடலில் உடையின்றி உப்பிய நிலையில் நிர்வாணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடந்து சிறுவர்கள் அங்குள்ளோரிடம் விபரத்தை கூறினர்.

    அதன்பேரில், எம்.ஜி.ஆர் நகர் சுனாமி குடியிருப்பைச்சேர்ந்த மினி லாரி டிரைவர் ராஜீவ் காந்தி என்பவர், காரைக்கால் நகர காவல்நிலையத்திற்கு பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்தார். மேலும், அந்த சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சிலர் பெண்ணின் உடலை பார்த்து அடையாளம் தெரியாத காரணத்தால், யாரோ, இந்த பெண்ணை இங்கு கொண்டுவந்து கற்பழித்து கொலை செய்தி ருக்கலாம்என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீ சார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜாவை அடுத்த சாத்தம்பாக்கம் கிராம கால்நடை தீவ னம் பண்ணையையொட்டி வனத்துறைக்கு சொந்தமான ஓடையில் நீரில் அடையாளம் தெரியாத பெண் பிணம் கிடந் தது.

    சிவப்பு சுடிதார் அணிந்திருந்த அந்த பெண் குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இறந்து பிணமாக கிடந்த பெண் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள ராமநாதபுரம் காலனி காந்தி தெருவை சேர்ந்த நாகராஜன் மகள் ரேஷ்மலதா (வயது 27) என்பது தெரியவந்தது.

    இவர் கடந்த மாதம் 22-ந்தேதி வீட்டை விட்டு சென்றவர் மாயமானவராவார். இது குறித்து வெளியூரில் பணியாற்றும் ரேஷ்மலதாவின் கணவர் கோபிக்கு தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் ரேஷ்மலதாவின் உடல் குடும்பத் தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது வாகனம் மோதி இறந்தாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பா அருசூக லப்பட்டு-தெத்துகாடு சாலை ஓரத்தில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக சங்கராபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது இறந்து கிடந்த பெண் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை? மேலும் அவர் நீல நிற ஜாக்கெட், ரோஸ் கலர் புடவை அணிந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது வாகனம் மோதி இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சின்னமனூரில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார்
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் கம்பம் மணிேநரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது தங்கை ஜோதி (வயது40) என்பவருக்கும் காமாட்சி புரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு மனோஜ் (20) என்ற மகனும், சர்மிளா (18) என்ற மகளும் உள்ளனர். ஜோதி வீட்டு வேலை மற்றும் பூ கட்டும் வியாபாரம் பார்த்து வந்தார். அவரது கணவர் முருகன் பூக்கடை யில் வேலை பார்த்து வந்துள்ளார். மகள் சர்மிளா திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். மனோஜ் ஆண்டிபட்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். ஆனால் தற்போது படிப்பை நிறுத்தி விட்டு அதே கல்லூரியில் மாரத்தான் பயிற்சியில் உள்ளார்.

    முருகன் குடி பழக்க த்துக்கு அடிமையானதால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து சில நாட்களாக முருகன் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். இந்நிலையில் திருப்பூரில் இருந்து சர்மிளா தனது தாயிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்து தனது அண்ணன் மற்றும் பாட்டிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து சர்மிளா மற்றும் மனோஜ் ஆகியோர் வீட்டிற்கு வந்த பார்த்துள்ளனர். வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊர் தலைவர் முன்னிலையில் கதவை உடைத்து பார்த்த போது ஜோதி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து ஓடைப்பட்டி போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜோதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருப்பசாமி கோவில் அருகே உள்ள வைகை ஆற்றங்கரை பகுதியில் அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடந்தது
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஆண்டிபட்டி:

    போடி தாலுகா போலீஸ் தேனி மாவட்டம் குன்னூர் கருப்பசாமி கோவில் அருகே உள்ள வைகை ஆற்றங்கரை பகுதியில் அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் விஜயமுருகன் க.விலக்கு போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் 45 முதல் 55 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தது தெரிய வந்தது. அவர் யார்? எந்த ஊர்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×