search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Female body"

    • தற்கொலை செய்த பெண்ணின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கே.சென்னம்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி முத்துமாரி (வயது45). இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசுக்கு தகவல் அளிக்காமல் பெண்ணின் உடலை உறவினர்கள் எரித்து விட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த கே.சென்னம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஜெயா பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது ஜெயாவிற்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு இருந்து வந்ததும், பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணம டையாததால் மனவிரக்தியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இருப்பினும் அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் அளிக்காமல் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை எரித்தது குறித்து கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் ஜெயா புகார் செய்தார். அதன்பேரில் முத்துமாரியின் கணவர் வேல்முருகன், அவரது தந்தை பாண்டி, உறவினர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதிக்கத்தக்க பெண் உடலில் உடையின்றி உப்பிய நிலையில் நிர்வாணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • காவல்நிலையத்திற்கு பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அகில இந்திய வானொலி நிலையம் அருகே, தியாகி திருநாவுக்கரசு நகரை ஒட்டி, வாய்க்கல் ஒன்று உள்ளது. வாய்க்காலை ஒட்டிய வயல்வெளிகளில், அப்பகுதி சிறுவர்கள் நத்தை பிடிப்பது வழக்கம். வழக்கம் போல், சிறுவர்கள் சிலர், அப்பகுதி யில் நத்தை பிடித்து கொண்டிருந்த போது, வாய்க்கால் நீரில், 40 லிருந்து 45 வய து மதிக்கத்தக்க பெண், உடலில் உடையின்றி உப்பிய நிலையில் நிர்வாணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடந்து சிறுவர்கள் அங்குள்ளோரிடம் விபரத்தை கூறினர்.

    அதன்பேரில், எம்.ஜி.ஆர் நகர் சுனாமி குடியிருப்பைச்சேர்ந்த மினி லாரி டிரைவர் ராஜீவ் காந்தி என்பவர், காரைக்கால் நகர காவல்நிலையத்திற்கு பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்தார். மேலும், அந்த சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சிலர் பெண்ணின் உடலை பார்த்து அடையாளம் தெரியாத காரணத்தால், யாரோ, இந்த பெண்ணை இங்கு கொண்டுவந்து கற்பழித்து கொலை செய்தி ருக்கலாம்என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீ சார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×