search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "combustion"

    • மோட்டார் சைக்கிள் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது.
    • மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த 2 பேரை தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முத்து சாமிபுரம் காமராஜர்புரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது22). இவரது உறவினர்கள் அங்கு முக்கிய பொறுப்பில் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று அதே பகுதியை சேர்ந்த தலைமலை(21), பால்பாண்டி (23) ஆகிய 2 பேர் சதீஷ்குமாரின் உறவி னர்களை அவதூறாக பேசி பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது.

    இதனை சதீஷ்குமார் கண்டித்ததால் அவர்க ளுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமரசம் செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சதீஷ்குமார் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த தலைமலை, பால்பாண்டி ஆகியோர் பெட்ரோல் ஊற்றி மோட்டார் சைக்கி ளுக்கு தீ வைத்து விட்டு தப்பினர். இதில் மோட்டார் சைக்கிள் எரிந்து சேதமானது. இதுகுறித்து சதீஷ்குமார் தளவாய் புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த 2 பேரை தேடி வருகின்றனர்.

    • தற்கொலை செய்த பெண்ணின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கே.சென்னம்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி முத்துமாரி (வயது45). இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசுக்கு தகவல் அளிக்காமல் பெண்ணின் உடலை உறவினர்கள் எரித்து விட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த கே.சென்னம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஜெயா பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது ஜெயாவிற்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு இருந்து வந்ததும், பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணம டையாததால் மனவிரக்தியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இருப்பினும் அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் அளிக்காமல் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை எரித்தது குறித்து கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் ஜெயா புகார் செய்தார். அதன்பேரில் முத்துமாரியின் கணவர் வேல்முருகன், அவரது தந்தை பாண்டி, உறவினர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 16-வது குறுக்கு தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
    • 4 மாடிகள் கொண்ட இந்த குடியிருப்பில் 20- க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 16-வது குறுக்கு தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

    4 மாடிகள் கொண்ட இந்த குடியிருப்பில் 20- க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் இருந்தவர்கள் புத்தாண்டை கொண்டாடிவிட்டு தூங்க சென்றனர். அதிகாலை 2.10 மணிக்கு திடீரென சத்தம் கேட்டுள்ளது.

    உடனே குடியிருப்பு வாசிகள் வீடுகளை விட்டு வெளியில் வந்து பார்த்தபோது அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்தம் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 மோட்டார் சைக்கிள்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

    உடனே அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா, சப்- இன்ஸ்பெக்டர் பாட்ஷா மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். குடியிருப்பில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் நடைபெற்ற சம்பவம் குறித்து போலீசாரால் உடனடியாக எந்த முடிவிற்கும் வர முடியவில்லை.

    ஏதாவது ஒரு வாகனத்தில் தீப்பொறி பட்டு மற்ற வாகனங்கள் எரிந்திருக்கலாம். அல்லது யாராவது வாகனங்களுக்கு தீ வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கி ன்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாகனங்கள் எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு 6 மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டுள்ளது. இங்கு வசிப்பவர்கள் வசதி படைத்தவர்களாக இருந்தும். அடுக்குமாடி குடியிருப்பில் கண்காணிப்பு கேமரா இல்லாததும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×