இந்தியா

கதையை பொய்யாக்கிய கரடிகள்... இந்த வீடியோவ பாருங்க...

Published On 2024-05-10 07:06 GMT   |   Update On 2024-05-10 07:06 GMT
  • வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்துள்ளது.
  • வீடியோவை பார்த்த வன ஆர்வலர்கள் மற்றும் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன்கஸ்வான் சமூக வலைதளங்களில் வன விலங்குகள் தொடர்பாக ஏராளமான வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில், கரடியும், குட்டியும் மரத்தில் ஏறி, இறங்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். பொதுவாக கரடிகளால் மரத்தில் ஏற முடியாது என ஒரு கதையை கூறுவார்கள். ஆனால் அது தவறு என கூறும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.


வீடியோவுடன் அவரது பதிவில், ஒரு நண்பர் கரடியிடம் இருந்து தனது உயிரை காப்பாற்றிய கதையை நீங்கள் அனைவரும் கேள்விபட்டிருப்பீர்கள். இங்கே ஒரு இமாலயன் கரடியும், அதன் குட்டியும் அந்த கதையை பொய் என காட்டுகிறது என கூறி உள்ளார்.

இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்த நிலையில், வன ஆர்வலர்கள் மற்றும் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News