செய்திகள்
அ.தி.மு.க. பிரமுகர் மீது தாக்குதல்- முன்னாள் கவுன்சிலர் மீது புகார்
வேளச்சேரி கல்லூரியில் நடந்த விழாவில் அ.தி.மு.க. பிரமுகர் மீது தாக்குதல் நடத்தியதாக முன்னாள் கவுன்சிலர் மீது போலீசில் புகாரி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தேவானை. இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
எனது மகன் சுகுமார் தினகரன் அணியில் பணிபுரிந்து வந்தார். அங்கிருந்து விலகி அ.தி.மு.க.வில் தற்போது இணைந்து பணியாற்றி வருகிறார்.
வேளச்சேரியில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற கல்லூரி விழா முடிந்து திரும்பியபோது, எனது மகன் சுகுமாரை முன்னாள் கவுன்சிலர் சரவணன் அவரது சகோதரர் பாலு, மகன்கள் ராஜூ, கார்த்திக் மற்றும் ஏழுமலை, ராஜா, பிரகாஷ், சுரேஷ், ராமசாமி ஆகியோர் கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தினர்.
இதில் காயமடைந்த அவன் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி வேளச்சேரி போலீசில் புகார் அளித்துள்ளேன்.
என் மகனை தாக்கியவர்களில் ஏழுமலை, பிரகாஷ் ஆகியோர் மீது வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் கடத்தல் வழக்கும் உள்ளது. இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தேவானை. இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
எனது மகன் சுகுமார் தினகரன் அணியில் பணிபுரிந்து வந்தார். அங்கிருந்து விலகி அ.தி.மு.க.வில் தற்போது இணைந்து பணியாற்றி வருகிறார்.
வேளச்சேரியில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற கல்லூரி விழா முடிந்து திரும்பியபோது, எனது மகன் சுகுமாரை முன்னாள் கவுன்சிலர் சரவணன் அவரது சகோதரர் பாலு, மகன்கள் ராஜூ, கார்த்திக் மற்றும் ஏழுமலை, ராஜா, பிரகாஷ், சுரேஷ், ராமசாமி ஆகியோர் கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தினர்.
இதில் காயமடைந்த அவன் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி வேளச்சேரி போலீசில் புகார் அளித்துள்ளேன்.
என் மகனை தாக்கியவர்களில் ஏழுமலை, பிரகாஷ் ஆகியோர் மீது வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் கடத்தல் வழக்கும் உள்ளது. இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.